இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு இடையே நடைபெற இருந்த முதல் ஒருநாள் போட்டி கொரோனாவால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 டி20 மற்றும் 4 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது.இதனிடையே ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருந்த முதல் ஒரு நாள் போட்டி மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி கடந்த 4 ஆம் தேதி நடக்க இருந்தது நிலையில் ,இருநாட்டு வீரர்களும் தங்கியிருந்த ஹோட்டல் ஊழியர்களில் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது .
இதனால் போட்டியானது தள்ளிவைக்கப்பட்டு 6ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் சனிக்கிழமை இங்கிலாந்து வீரர்களுக்கு மீண்டும் கொரோனா சோதனை செய்யப்பட்டது.இந்த சோதனை முடிவுகளில் இங்கிலாந்தை சேர்ந்த இரண்டு நபர்களுக்கு கொரோனா இருக்கலாம் என்ற உறுதிப்படுத்தப்படாத முடிவு வெளிவந்துள்ளது .
இதனைத்தொடர்ந்து வீரர்கள் மற்றும் நிர்வாகத்தினர் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.மருத்துவ குழுக்களின் முடிவு வருவரை அந்த நபர்கள் தங்கள் அறையைவிட்டு வெளிவரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது .ஏற்கனவே நடந்த 3 டி20 போட்டிகளில் அனைத்திலும் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…