இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் தனது ஓய்வை அறிவித்த டு பிளெசிஸ்..!

Published by
murugan

தென்னாப்பிரிக்காவின் நட்சத்திர கிரிக்கெட் வீரரும், முன்னாள் கேப்டனுமான டு பிளெசிஸ் இன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

36 வயதான இவர் தனது தென்னாப்பிரிக்கா அணிக்காக 69 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி  4163 ரன்கள் எடுத்துள்ளார்.

இந்த காலகட்டத்தில் அவர் 10 சதங்கள் மற்றும் 21 அரைசதங்கள் அடித்துள்ளார். டு பிளெசிஸ் தனது ஓய்வு குறித்து ரசிகர்களுக்கு இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் தெரிவித்தார். அவர் கையில் ஒரு பேட்டை எடுத்து, தன்னைப் பற்றிய ஒரு படத்தைப் பகிர்ந்துகொண்டு, ‘என் இதயம் தெளிவாக உள்ளது, புதிய அத்தியாயத்திற்குள் செல்ல நேரம் சரியானது’ என எழுதியுள்ளார்.

சமீபத்தில் முடிவடைந்த பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் கூட அவர் சிறப்பு எதுவும் விளையாடவில்லை, பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் விளையாடிய கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் 4 இன்னிங்சில் 55 ரன்கள் மட்டுமே எடுத்தார். பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில், தென்னாப்பிரிக்கா அணி டெஸ்ட் தொடரை 0–2 என்ற கணக்கில் இழந்தது.

டு பிளெசிஸ் 2012 நவம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டி மூலம் அறிமுகமானார். டு பிளெசிஸ் தனது கடைசி போட்டியை பாகிஸ்தானுக்கு எதிராக ராவல்பிண்டியில் விளையாடினார். கடந்த ஆண்டு டிசம்பரில் இலங்கைக்கு எதிராக டெஸ்டில் 199 ரன்கள் அடித்தார். இதுவே டு பிளெசிஸ் டெஸ்ட் போட்டியில் அடித்த அதிக ரன்கள், தென்னாப்பிரிக்காவுக்காக 36 டெஸ்ட் போட்டிகளுக்கு டு பிளெஸி தலைமை தாங்கியுள்ளார்.

 

Published by
murugan

Recent Posts

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

7 hours ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

7 hours ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

8 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

8 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

10 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

11 hours ago