உலகக்கோப்பை தொடரில் இதுவரை இந்தியா,பாகிஸ்தான் அணிகள் 6 முறை மோதியது.மோதிய அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியா, பாகிஸ்தான் அணிகள் உலகக்கோப்பை போட்டியி ல் ஏழாவது முறையாக மோதியது.
அப்போட்டியில் பாகிஸ்தான் அணியை 89 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.இதனால் 7-வது முறையும் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியது.
இந்நிலையில் பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் குஜ்ரன்வாலா நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.அந்த மனுவில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை தடை செய்ய வேண்டும் என்றும் மேலும் தற்போது கிரிக்கெட் வாரியத்தில் உள்ள தேர்வு குழுக்களிலும் அனைத்தையும் நீக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் தக்க பதிலளிக்க வேண்டுமென கிரிக்கெட் வாரியத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தற்போது கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக இருப்பவர் முன்னாள் கேப்டன் இன் சமாம் உக் ஹக் . நடப்பு உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியில் மூன்று புள்ளிகளைப் பெற்று புள்ளிப் பட்டியலில் 9 -வது இடத்தில் உள்ளது. இதனால் பாகிஸ்தான் அணி மீது ரசிகர்கள் கடும் கோவத்தில் உள்ளனர்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…