இந்தியாவில் உள்ள அகமதாபாத்தில் தற்போது கட்டப்பட்டு வரும் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் முதல் போட்டி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கு முன்னர் உலகில் மிக பெரிய ஸ்டேடியமான ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் ஸ்டேடியம் இதில் 100,024 இருக்கைகள் உள்ளன. அதற்கு அடுத்த நிலையில் இந்தியாவில் உள்ள ஈடன் கார்டன் ஸ்டேடியத்தில் சுமார் 68,000 இருக்கைகள் இருக்கின்றனர். மூன்றாம் இடத்தில ஷாஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் இதுவும் இந்தியாவில் நயா ராய்பூர் , டெல்லி தலைநகரங்கள், சத்தீஸ்கர் இதில் 65000 இருக்கைகள் உள்ளன.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 1982-ம் ஆண்டு சர்தார்பட்டேல் கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டப்பட்டது. இந்த ஸ்டேடியத்தை இடித்து 63 ஏக்கர் பரப்பளவில் புதிய ஸ்டேடியம் கட்டும்பணி நடந்து வருகிறது. இதற்கான பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு தொடக்க விழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடைபெற்று வருகின்றன.
இந்த ஸ்டேடியம் ரூ.700 கோடி செலவில் கட்டப்பட்டு சுமார் 1 லட்சத்தி 10 ஆயிரம் நபர்கள் அமரலாம். இதனால் இது உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமாக கூறப்படுகிறது. இந்த ஸ்டேடியத்தில் தொடக்க ஆட்டமாக ஆசிய லெவன்- உலக லெவன் அணிகள் மோதும் போட்டியை நடத்த கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.
சென்னை : தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாநில அரசு பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல்…
வாஷிங்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடத்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…
சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…
சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…
ஹரியானா : பஹல்காமில் நடந்த தாக்குதலில் திருமணம் முடிந்து ஆறு நாட்களுக்குப் பிறகு தனது கணவர் பிரிந்த போதிலும், தாக்குதல்…