“எனக்கு மாரடைப்பு ஏற்படவில்லை;நன்றாக இருக்கிறேன்” – பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம்…!

Published by
Edison

பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக் தனக்கு மாரடைப்பு ஏற்படவில்லை என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக்குக்கு நேற்று நெஞ்சு வலி ஏற்பட்ததாகவும்,இதனால்,ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சை செய்யப்பட்டு நலமாக உள்ளதாகவும் கூறப்பட்டது.மேலும்,இன்சமாம் தற்போது தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாகவும் தகவல் வெளியாகின.

இந்நிலையில்,இன்சமாம் உல் ஹக் தனக்கு மாரடைப்பு ஏற்படவில்லை என்றும், வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவரிடம் சென்றதாகவும் தெரவித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் தனது யூ-டியூப் பக்கத்தில் கூறியதாவது:

“எனது ஆரோக்கியத்திற்காக பிரார்த்தனை செய்ததற்காக பாகிஸ்தானிலும் உலகெங்கிலும் உள்ள அனைவருக்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன். பாகிஸ்தான் மக்கள் மற்றும் தங்கள் வாழ்த்துக்களை அனுப்பிய பாகிஸ்தான் மற்றும் உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் வீரர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

எனக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக அறிக்கைகள் பார்த்தேன்.மாறாக,நான் வழக்கமான பரிசோதனைக்காகவே எனது மருத்துவரிடம் சென்றேன், அவர்கள் ஆஞ்சியோகிராபி நடத்த விரும்புவதாக கூறினர். ஆஞ்சியோகிராஃபியின் போது, ​​என்னுடைய தமனி தடைபட்டதை அவர்கள் கவனித்தனர். அவர்கள் அந்தப் பிரச்சினையைத் தணிக்க ஸ்டென்ட்களைச் செலுத்தினர்.அது வெற்றிகரமானது மற்றும் எளிதானது, நான் மருத்துவமனையில் 12 மணிநேரம் கழித்து வீடு திரும்பினேன். நான் நன்றாக இருக்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.

அவர்,375 ஒருநாள் போட்டிகளில் 11,701 ரன்கள் எடுத்தார்.மேலும், 119 டெஸ்ட் போட்டிகளில் 8829 ரன்கள் எடுத்து டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற பெருமையைப் பெற்றார்.

இன்சமாம் 2007 இல் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றார், பின்னர் பாகிஸ்தானில் ஒரு பேட்டிங் ஆலோசகராகவும் பின்னர் 2016 முதல் 2019 வரை தலைமை தேர்வாளராகவும் பல பதவிகளை வகித்துள்ளார். அவர் ஆப்கானிஸ்தானின் தலைமை பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…

37 minutes ago

“கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…

1 hour ago

”ராமதாஸ் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது” – அன்புமணி தலைமையில் தீர்மானம்.!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…

2 hours ago

பண மோசடி வழக்கு: பிரபல மலையாள நடிகர் செளபின் சாஹிர் கைது.!

கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…

2 hours ago

3வது டெஸ்ட் போட்டி: தீவிர பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணி..!

லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…

3 hours ago

ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்குப் பதிவு.!

உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…

4 hours ago