ஆவணங்கள் தாமதம் ஆனதால் ஹர்பஜனுக்கு கேல் ரத்னா விருது நிராகரிப்பு !

Published by
murugan

பஞ்சாப் அரசு சார்பில் கேல் ரத்னா விருதிற்கு ஹர்பஜன் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் அதற்கான ஆவணங்கள் தாமதமாக வந்து அடைந்ததாக மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சகம்  நிராகரித்து உள்ளது. இதனால் ஹர்பஜன் வருத்தமடைந்து உள்ளார்.

Image result for Harbhajan Singh

இதனை தொடர்ந்து ஆவணங்கள் தாமதமான விவகாரத்தில் பஞ்சாப் விளையாட்டு துறை அமைச்சர் ராணா குர்மித் சிங் சோதியிடம் ஹர்பஜன் வலியுறுத்தி உள்ளார்.ஹர்பஜன் கோரிக்கையை ஏற்று கொண்ட குர்மித் சிங் கேல் ரத்னா விருது வழங்க வலியுறுத்தியும் , ஆவணங்கள் தாமதமாக வந்ததற்கான காரணத்தையும் விசாரணை செய்ய வேண்டும் என உத்தரவு விட்டார்.

இது தொடர்பாக ஹர்பஜன் ட்விட்டரில் ஒரு உருக்கமான விடியோவை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் கேல் ரத்னா விருதிற்காக பரிந்துரை ஆவணங்களை பஞ்சாப் அரசு தாமதமாக அனுப்பியதால் மத்திய அரசு நிராகரித்து விட்டது.இதனால் இந்த வருட விருது பட்டியலில் எனது பெயர் இடம் பெறவில்லை.

மார்ச் 20-ம் தேதியை நான் ஆவணங்களை சமர்ப்பித்து விட்டேன்.அந்த ஆவணங்கள் 10-15 நாள்களில் சென்று இருக்க வேண்டும் ஆனால் ஆவணங்கள் செல்லவில்லை.உரிய நேரத்தில் ஆவணங்கள் சென்று இருந்தால் விருது கிடைத்து இருக்கும் .எனக்கு விருது கிடைத்து இருந்தால் மற்ற வீரர்களுக்கு ஊக்கமாக இருந்து இருக்கும்.

இது போன்று நடந்தால் வீரர்களுக்கு சிக்கல் .இந்த வருட தாமதமானதால் எனது பெயரை அடுத்த வருடம் பரிந்துரை செய்யவேண்டும் என கூறினார்.விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு உயரிய விருதான கேல் ரத்னா விருது  மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி பெயரில்  1991-ம் ஆண்டு முதல் வீரர்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.

முதல் விருது செஸ் வீரர் விசுவநாதன் ஆனந்திற்கு கொடுக்கப்பட்டது.கிரிக்கெட்டில் சச்சின் , டோனி , விராட் கோலி ஆகியோருக்கு கொடுக்கப்பட்டு உள்ளது.

Published by
murugan

Recent Posts

டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …

56 minutes ago

பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…

2 hours ago

அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…

2 hours ago

அத்துமீறிய பாகிஸ்தானின் ட்ரோன்கள்? சுட்டு வீழ்த்தப்பட்டதா?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…

3 hours ago

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

18 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

19 hours ago