இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஷிகர் தவான், சுப்மான் கில் இருவரும் களமிறங்கினார். ஆனால் ஆட்டம் தொடக்கத்திலேயே ஷிகர் தவான் 16 ரன்னில் தனது விக்கெட்டைஇழக்க, இதைத் தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி களமிறங்கினார். நிதானமாக விளையாடி வந்த சுப்மான் கில் 33 ரன் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார்.
இதையடுத்து, களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐய்யர் 19 ரன்களில் வெளியேறினார். சிறப்பாக விளையாடி வந்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அரைசதம் அடித்த 63 ரன்னில் பெவிலியன் திரும்பினார். பின்னர் இறங்கிய ஹர்திக் பாண்டியா, ரவீந்தர் ஜடேஜா இருவரும் சிறப்பாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.
அதிரடியாக விளையாடி வந்த ஹர்திக் பாண்டியா 76 பந்தில் 92 ரன்கள் குவித்தார். ரவீந்தர் ஜடேஜா 50 பந்தில் 66 ரன்கள் குவித்தார். இறுதியாக இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 302 ரன்கள் எடுத்தனர். கடைசி வரை களத்தில் ஹர்திக் பாண்டியா 92 ரன்களுடனும், ரவீந்தர் ஜடேஜா 66 ரன்களுடனும் நின்றனர்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…