Vaibhav Pandya arrested [image source: x/@hardikpandya7]
Hardik Pandya: ஹர்திக் பாண்டியா ஏமாற்றி ரூ.4.3 கோடி மோசடி செய்த அவரது சகோதரர் வைபவ் பாண்டியா கைது செய்யப்பட்டார்.
இந்திய கிரிக்கெட் அணி வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருனால் பாண்டியாவின் பெரியப்பா மகனான வைபவ் பாண்டியா பிசினஸில் மோசடி செய்ததால் மும்பை காவல்துறை கைது செய்தது. கடந்த 2021ம் ஆண்டு முதல் மும்பையில் ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருனால் பாண்டியாவுடன் இணைந்து அவர்கள் சகோதரரான வைபவ் பாண்டியா பாலிமர் வியாபாரம் நிறுவனத்தை நடத்தி வந்தார்.
அதில், ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருனால் பாண்டியா ஆகியோர் தலா 40% முதலீடும், வைபவ் பாண்டியா 20% முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், அந்நிறுவனத்தை நிர்வகிக்கும் பொறுப்பும் வைபவ் பாண்டியாவிடம் இருந்துள்ளது. இந்த நிலையில், மும்பை பொருளாதார குற்றப் பிரிவு காவல்துறையிடம் ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருனால் பாண்டியா சார்பில் பரபரப்பான புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.
அந்த புகாரில் ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருனால் பாண்டியாவுக்கு தெரியாமல், வைபவ் பாண்டியா ஒரு தனி பாலிமர் நிறுவனத்தை தொடங்கி, எங்கள் மூவருக்குமான இருக்கும் நிறுவனத்தில் செய்ய வேண்டிய விற்பனையை அவரது சொந்த நிறுவனத்தின் பெயரில் செய்துள்ளார். அதேசமயம் அவரது 20% லிருந்து 33% ஆக மாற்றி இருக்கிறார்.
மேலும், எங்கள் நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் இருந்து சுமார் ஒரு கோடியை தனது வங்கிக் கணக்கிற்கு மாற்றி இருப்பதாகவும், சுமார் ரூ.4.3 கோடி வரை வைபவ் பாண்டியா ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் வைபவ் பாண்டியாவை மும்பை காவல்துறை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. அவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…
சென்னை : புழல் மத்திய சிறையில் காவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக், மற்றும் போலீஸ் பக்ரூதீன்…
ராஜஸ்தான் : மாநிலம் சுரு மாவட்டத்திற்கு அருகே இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம் ஒன்று பயிற்சியின்போது திடீரென கீழே…