ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் வெற்றி – வரலாறு படைத்த வங்காளதேசம்!

Published by
பாலா கலியமூர்த்தி

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றி 3-0 என்ற கணக்கில் வங்காளதேசம் அணி வரலாறு படைத்துள்ளது.

ஆஸ்திரேலியா அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. கடந்த 3ம் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்திலும், இதனையடுத்து 4ம் தேதி நடைபெற்ற 2வது டி20 போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசம் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் டி20 தொடரில் முன்னணியில் இருந்த வங்காளதேசம் அணி, தொடரை கைப்பற்றும் நோக்கத்தில் நேற்று மூன்றாவது போட்டியை எதிர்கொண்டது.

டாக்கா ஷேர் பங்களா தேசிய மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பேட் செய்தது. அதன்படி, வங்காளதேசம் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு, 127 ரன்கள் எடுத்தது. கேப்டன் மகமுதுல்லா மட்டுமே சிறப்பாக ஆடி அரைசதம் அடித்து 52 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஆஸ்திரேலியா அணி சார்பில் நாதன் எல்லிஸ் 3 விக்கெட், ஹேசில்வுட், ஆடம் சாம்பா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, வங்காளதேச அணியினரின் ஆல் ரவுண்ட் ஆட்டத்தால் ஆஸ்திரேலியா திணறியது.

ஆட்டம் இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் மட்டுமே எடுத்து தொடரை இழந்தது. அதிகபட்சமாக ஆஸ்ரேலிய அணி வீரர் மிட்செல் மார்ஷ் 51 ரன்கள் எடுத்தார். பந்துவீச்சில் வங்கதேச சார்பில் இஸ்லாம் 2 விக்கெட், ஷாகிப் அல் ஹசன், நசும் அகமது தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதன் மூலம் 10 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி அபார வெற்றி பெற்றது. அத்துடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரைக் கைப்பற்றி தொடரில் 3-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. வங்காளதேசம் அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றி புதிய வரலாறு படைத்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல்முறையாக டி20 தொடரை வங்கதேச அணி கைப்பற்றியுள்ளது. முக்கியமான நேரத்தில் களமிறங்கி அரைசதம் அடித்த கேப்டன் மகமுதுல்லாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…

2 hours ago

“கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…

3 hours ago

”ராமதாஸ் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது” – அன்புமணி தலைமையில் தீர்மானம்.!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…

3 hours ago

பண மோசடி வழக்கு: பிரபல மலையாள நடிகர் செளபின் சாஹிர் கைது.!

கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…

4 hours ago

3வது டெஸ்ட் போட்டி: தீவிர பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணி..!

லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…

4 hours ago

ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்குப் பதிவு.!

உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…

5 hours ago