‘அவர் எனக்கு இன்னோரு மகன்’ ! ரிஷப் பண்ட் குறித்து கவலைப்பட்ட நடிகர் ஷாருக்!!

Published by
அகில் R
Shah Rukh Khan : ரிஷப் பண்டுக்கு ஏற்பட்ட கார் விபத்தில், அவருக்கு ஒன்றும் ஆக கூடாது என்று நடிகர் ஷாருக் கான் கவலைப்பட்ததாக நேற்றைய போட்டியின் முடிவின் போது வருத்தம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2022-ம் ஆண்டில் டிசம்பர்-30 ம் தேதி இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனான ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் படுகாயமடைந்த பண்ட், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இருப்பினும், பல்வேறு மருத்துவ சிகிச்சைக்கு பிறகு தனது உடல்நிலையை சரி செய்து, தற்போது முழு உடற்தகுதியுடன் மீண்டும் ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்டு சிறப்பாக விளையாடி கொண்டு வருகிறார்.
தற்போது, அவர் இந்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை அணியிலும் தேர்வாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில், நேற்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், டெல்லி அணியும் மோதியது. இந்த போட்டியில் கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டி முடிந்த பிறகு கொல்கத்தா அணியின் உரிமையாளரான பாலிவுட் நடிகரான ஷாருக் கான், டெல்லி அணியின் கேப்டனான ரிஷப் பண்ட்டை சந்தித்து பேசினார்.
அதன் பிறகு ஸ்டார் ஸ்போர்ட்ஸ்ஸிடம் பேசிய ஷாருக் கான், “ரிஷப் பண்டுக்கு ஏற்பட்ட கார் விபத்து சிசிடிவி வீடியோவைப் பார்த்து மிகவும் பதறி விட்டேன். அவர் எனக்கு ஒரு மகனை போன்றவர். அவருக்கு எந்த வித காயமம் ஏற்பட்டுவிடக்கூடாது என்று நான் மிகவும் பயந்தேன். அவர் இப்போது மீண்டு வந்து நன்றாக விளையாடி கொண்டிருப்பதை பார்க்கையில் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
அவர் மேலும் தொடர்ந்து விளையாடுவார் என்று நான் நம்புகிறேன்”, என்று நேற்றைய போட்டிக்கு பிறகு ஸ்டார் ஸ்போர்ட்ஸ்க்கு அளித்த பேட்டியில் ரிஷப் பண்ட் குறித்து வருத்தம் தெரிவித்து பேசி இருந்தார். ரிஷப் பண்ட், விபத்தில் இருந்து மீண்டு கிட்டத்தட்ட 15 மாதம் 454 நாட்கள் என நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்த ஐபில் தொடரில் களமிறங்கி விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by
அகில் R

Recent Posts

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

1 hour ago

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

2 hours ago

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

2 hours ago

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

3 hours ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

3 hours ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

5 hours ago