இனவெறி பேச்சு: சிராஜ் மற்றும் இந்திய அணியினரிடம் நான் மன்னிப்பு கோருகிறேன்” – வார்னர் வருத்தம் !

Published by
Surya

சிராஜ் மற்றும் பும்ரா மீது ஆஸ்திரேலியா ரசிகர்கள் இனவெறி குறித்து பேசிய நிலையில், அவர்களின் செயலுக்காக சிராஜ் மற்றும் இந்திய அணியினரிடம் டேவிட் வார்னர் மன்னிப்பு கோரியுள்ளார்.

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள், டி-20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, 3 ஆம் டெஸ்ட் போட்டியை இந்திய அணி டிரா செய்ததால், நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமனில் உள்ளது.

சிட்னி மைதானத்தில் நடந்த 2 மற்றும் 3 ஆம் நாள் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்களான சிராஜ் மற்றும் பும்ரா மீது ஆஸ்திரேலியா ரசிகர்கள் இனவெறி தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம், சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், 3 ஆம் நாள் ஆட்டம் முடிந்த பின் ரஹானே, அஷ்வின், நடுவர்களாக பால் ரீஃபல் மற்றும் பால் வில்சன் ஆகியோரிடம் முறையாக புகார் அளித்துள்ளனர். மேலும், சிட்னி மைதான பாதுகாப்பு அதிகாரிகளிடமும் புகாரளிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து கிரிக்கெட் வீரர்கள், பிசிசிஐ, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உட்பட பலரும் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் தெரிவித்து வந்தார்கள். இந்நிலையில் ஆஸ்திரேலியா ரசிகர்கள் செய்த இந்த செயலுக்காக சிராஜ் மற்றும் இந்திய அணியினரிடம் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் மன்னிப்பு கோரியுள்ளார்.

இதுகுறித்த அவரின் இன்ஸ்டாகிராம் பதிவில், இனவெறி தொடர்பான ரசிகர்களின் கருத்திற்கு முகமது சிராஜ் மற்றும் இந்திய அணி வீரர்களிடம் மன்னிப்பு கேட்பதாக கூறினார். இதுபோன்ற செயலை பொறுத்துக் கொள்ள முடியாது மற்றும் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும், ஆஸ்திரேலிய மக்களிடம் இருந்து சிறப்பான ஒன்றையே எதிர்பார்க்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Published by
Surya

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

9 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

10 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

10 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

11 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

13 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

14 hours ago