இயான் மோர்கன் சிறந்த டி20 கேப்டன் என்று நான் நினைக்கவில்லை – சேவாக்…!

Published by
பால முருகன்

இயான் மோர்கன் சிறந்த டி20 கேப்டன் என்று நான் நினைக்கவில்லை என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் கேப்டன்சி குறித்து விமர்சித்து பேசியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் 15 வது லீக் போட்டி நேற்று முன் தினம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்களை எடுத்தனர். இதில் அதிகபட்சமாக டு பிளெசிஸ் 95* ருதுராஜ் 64 ரன்கள் எடுத்தனர்.

அதன்பின் 221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி, 19.1 ஓவர் முடிவில் தனது அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்து 202 ரன்கள் எடுத்து, 18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் கேப்டன்சி குறித்து விமர்சித்து பேசியுள்ளார்.  டி20 போட்டிகளுக்கான கேப்டனில் இயான் மோர்கன் சிறந்த கேப்டனாக எனக்கு தெரியவில்லை. ஒருநாள் தொடரில் வேண்டுமானலும் இயான் மோர்கன் சிறந்த கேப்டனாக இருக்கலாம்.

மேலும் டி20, போட்டிகளில் அவர் சிறந்த கேப்டன் கிடையாது. இங்கிலாந்து அணியில் எந்த வீரர் பேட்டிங் செய்தாலும், பவுலிங் செய்தாலும் மோர்கனுக்கு வெற்றி பெற்று தருவார்கள். ஐபிஎல் போட்டியை பொறுத்தவரை அப்படி இல்லை.  ஐபிஎல்லில் சிறந்த  அணியை மோர்கன் அமைக்க வேண்டும். மோர்கன் டி20 போட்டிகளுக்கு சிறந்த கேப்டன் என்று நான் நினைக்கவில்லை” என்று கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

48 minutes ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

1 hour ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

2 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

2 hours ago

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…

3 hours ago

அமெரிக்காவுக்கு என்ன வேலை? போர் நிறுத்தியது தவறு…சுப்பிரமணியன் சுவாமி பேச்சு!

டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…

4 hours ago