‘இது தோனிக்கு கடைசி சீசனா இருக்கும்னு எனக்கு தோணல ..’ ! – ராபின் உத்தப்பா

Published by
அகில் R

சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா எம்.எஸ்.தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்காது என கூறி இருக்கிறார்.

நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தான் சென்னை அணியின் முன்னாள் கேப்டனான தோனிக்கு கடைசி சீசனாக இருக்கும் என இந்த தொடர் தொடங்கும் தொடக்கத்திலிருந்தே ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது. மேலும், அவரது வயதும், காலில் அவருக்கு ஏற்பட்ட காயங்களும் இருந்தாலும் கூட ரசிகர்களுக்காக களமிறங்கி போட்டிக்கு இரண்டு, மூன்று சிக்ஸர்களையும் விளாசி வருகிறார். இதை அவரது ரசிகர்களும் மிகவும் விரும்பி அவருக்கு ஆதரவாகவே இருந்து வருகின்றனர்.

கடந்த ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் சென்னை அணி, குஜராத் அணியை வீழ்த்திய பிறகு பேசி இருந்த எம்.எஸ்.தோனி தான் அடுத்த சீசன் விளையிடுவதாகவும் கூறி இருந்தார். அதே போல தற்போது பல சிஎஸ்கே ரசிகர்கள் அவரை மேலும் ஒரு தொடர் விளையாட வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள். ஆனாலும் ஒரு சில ரசிகர்கள் அவர் எங்களுக்காக செய்ததே போதுமானது எனவும், அவர் ஓய்வு பெறலாம் எனவும் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், பல கிரிக்கெட் பிரபலங்களும், முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் தோனி அடுத்த ஐபிஎல் 2025 தொடரும் விளையாடுவார் என வர்ணனையில் பேசும் பொழுதோ அல்லது நேர்காணலிலோ பேசி வருகின்றனர். அந்த வரிசையில் சென்னை அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா நேற்று ஜியோ சினிமாவில் தோனியின் ஓய்வை குறித்து பேசி இருந்தார். அவர் கூறுகையில், “என்னை பொறுத்த வரை நான் என்ன நினைக்கிறன் என்றால் தோனிக்கு இது அவரது கடைசி சீசனாக இருக்காது.

அவர் மேலும் எனக்கு என்ன தோணுகிறது என்றால் அடுத்த ஐபிஎல் தொடரும் அவர் விளையாடுவார் என்று தெரிகிறது. அதே போல ருதுராஜ் கேப்டனாக ஒரு அணியை நாக்-அவுட் சுற்று வரை கொண்டு வந்துள்ளார். அதுவே அவருக்கும் அவரது அணிக்கும் ஒரு உத்வேகத்தை அது அளிக்கும். மேற்கொண்டு நடப்பதை நாம் பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும்”, என தோனியின் ஓய்வை பற்றி கூறியதோடு சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனான ருதுராஜை பற்றியும் ஜியோ சினிமாவில் பேசிய போது கூறி இருந்தார்.

Published by
அகில் R

Recent Posts

ரோஹித் – கோலி ஓய்வு பெற அழுத்தம் கொடுக்கப்பட்டதா? விளக்கம் கொடுத்த பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட்டின் மிகப் பெரிய நட்சத்திரங்களான ரோஹித் ஷர்மாவும், விராட் கோலியும் 2025 மே மாதத்தில் டெஸ்ட்…

56 minutes ago

யூடியூப் புதிய விதிகள் : தரமற்ற வீடியோக்களுக்கு இனி காசு இல்லை!

யூடியூப் உலகம் முழுக்க 200 கோடிக்கும் மேற்பட்ட மக்களால் பயன்படுத்தப்படும் ஒரு பிரம்மாண்ட மேடையாக இருந்து வருகிறது.  இதில் பலர்…

2 hours ago

’பென்ஸ்’ பட ஒளிப்பதிவாளரை திருமணம் செய்யப்போகும் நடிகை தான்யா!

சென்னை : நடிகை தன்யா ரவிச்சந்திரனுக்கும், ‘பென்ஸ்’ திரைப்பட ஒளிப்பதிவாளர் கௌதம் ஜார்ஜுக்கும் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நடைபெற்றது. ஜூலை…

3 hours ago

த.வெ.கவின் அடுத்த டார்கெட்…கோலாகலமாக நடந்த 2வது மாநாடு பந்தக்கால் நடும் விழா!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது. இந்த…

3 hours ago

நிமிஷா பிரியா வழக்கு : “ஒரு மனித உயிரைக் காப்பாற்றுவதற்கான முயற்சி” – ஏ.பி.அபூபக்கர்!

டெல்லி : கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, யேமனில் 2017-ம் ஆண்டு தலால் அப்தோ மஹ்தி என்பவரைக் கொலை…

4 hours ago

நாளை 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…இன்று 2 மாவட்டத்துக்கு எச்சரிக்கை!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூலை 16 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும்…

4 hours ago