Pat Cummins [file image ]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் 18-வது போட்டியாக நேற்று நடைபெற்ற போட்டியில் ஹைதராபாத் அணியின் கேப்டனான பேட் கம்மின்ஸ் வெற்றியின் காரணம் குறித்து பேசி இருந்தார்.
ஐபிஎல் தொடரின் 18-வது போட்டியாக நேற்று சென்னை அணியும், ஹைதராபாத் அணியும் நேற்று மோதியது. இந்த போட்டியில் ஹைதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதை குறித்து போட்டி முடிந்த பிறகு ஹைதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பேசி இருந்தார்.
அவர் பேசுகையில், “இந்த பிட்ச் வித்யாசமான மண்ணை கொண்ட மைதானம் என்பதால் பந்தின் வேகத்தைக் குறைத்து. மேலும், எங்களுக்கு இந்த பிட்ச்சானது சாதகமாகச் செயல்பட்டது. மேலும், ஷிவம் துபே சுழல் பந்து வீச்சுக்கு எதிராக நன்றாக அடித்ததால், நாங்கள் எங்கள் வேக பந்து தாக்குதலுக்கு தயாரானோம்.
எங்களுக்கு இந்த போட்டிகளில் 2 புள்ளிகளைப் பெறுவது முக்கியமானது. எங்கள் அணியின் அபிஷேக் சர்மா பேட் செய்வதைப் பார்ப்பது ஒருவித மகிழ்ச்சி அளித்தது. அவரது பேட்டிங் ஃபார்ம் சிறப்பாக அமைந்ததை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். நாங்கள் அவரை சுதந்திரமாக விளையாட ஊக்குவிக்கிறோம். அவரது பவர் பிளே அதிரடி ஆட்டம் தான் நாங்கள் வெற்றி பெற முதல் காரணமாக பார்க்கிறேன்.
அதன் பிறகு குறிப்பாக எம்.எஸ்.தோனி மைதானத்திற்குள் வரும் போது எழுந்த சத்தம் நான் இது வரை என் வாழ்நாளில் கேட்டதே இல்லை. மேலும், இன்னும் ஐந்து ஆட்டங்கள் எங்களுக்கு இதே ஹைதராபாத் மைதானத்தில் இருப்பதால், நாங்கள் அந்த 5 போட்டிகளையும் வெற்றி பெரும் முனைப்பில் இருக்கிறோம், ” என்று நேற்றைய போட்டியின் வெற்றிக்கு பிறகு ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேசி இருந்தார்.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…