‘அவர் வரும்போது எழுந்த சத்தம் என் வாழ்நாளில் கேட்டதே இல்லை’ – பேட் கம்மின்ஸ்

Published by
அகில் R

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் 18-வது போட்டியாக நேற்று நடைபெற்ற போட்டியில் ஹைதராபாத் அணியின் கேப்டனான பேட் கம்மின்ஸ் வெற்றியின் காரணம் குறித்து பேசி இருந்தார்.

ஐபிஎல் தொடரின் 18-வது போட்டியாக நேற்று சென்னை அணியும், ஹைதராபாத் அணியும் நேற்று மோதியது. இந்த போட்டியில் ஹைதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதை குறித்து போட்டி முடிந்த பிறகு ஹைதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பேசி இருந்தார்.

அவர் பேசுகையில், “இந்த பிட்ச் வித்யாசமான மண்ணை கொண்ட மைதானம் என்பதால் பந்தின் வேகத்தைக் குறைத்து. மேலும், எங்களுக்கு இந்த பிட்ச்சானது சாதகமாகச் செயல்பட்டது. மேலும், ஷிவம் துபே சுழல் பந்து வீச்சுக்கு எதிராக நன்றாக அடித்ததால், நாங்கள் எங்கள் வேக பந்து தாக்குதலுக்கு தயாரானோம்.

எங்களுக்கு இந்த போட்டிகளில்  2 புள்ளிகளைப் பெறுவது முக்கியமானது. எங்கள் அணியின் அபிஷேக் சர்மா பேட் செய்வதைப் பார்ப்பது ஒருவித மகிழ்ச்சி அளித்தது. அவரது பேட்டிங் ஃபார்ம் சிறப்பாக அமைந்ததை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். நாங்கள் அவரை சுதந்திரமாக விளையாட ஊக்குவிக்கிறோம். அவரது பவர் பிளே அதிரடி ஆட்டம் தான் நாங்கள் வெற்றி பெற முதல் காரணமாக பார்க்கிறேன்.

அதன் பிறகு குறிப்பாக எம்.எஸ்.தோனி மைதானத்திற்குள் வரும் போது எழுந்த சத்தம் நான் இது வரை என் வாழ்நாளில் கேட்டதே இல்லை. மேலும், இன்னும் ஐந்து ஆட்டங்கள் எங்களுக்கு இதே ஹைதராபாத் மைதானத்தில் இருப்பதால், நாங்கள் அந்த 5 போட்டிகளையும் வெற்றி பெரும் முனைப்பில் இருக்கிறோம், ” என்று நேற்றைய போட்டியின் வெற்றிக்கு பிறகு ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேசி இருந்தார்.

Published by
அகில் R

Recent Posts

பஹல்காம் தாக்குதல் : 2வது முறையாக பாகிஸ்தான் ஏவுகணை சோதனை.!

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…

5 minutes ago

ஜெலன்ஸ்கியை பின்னுக்குத் தள்ளி மாலத்தீவு அதிபர் சாதனை.! அப்படி என்ன தெரியுமா?

மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள்…

1 hour ago

பஹல்காம் தாக்குதல்: இந்தியாவுக்கு முழு ஆதரவு.., பிரதமர் மோடியிடம் ரஷ்ய அதிபர் உறுதி.!

மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…

2 hours ago

“அங்க புக் வச்சி எழுதுறான்.., மூக்குத்தியில் பிட் கொண்டு போக முடியுமா?” – சீமான் ஆவேசம்!

சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…

3 hours ago

“இதெல்லாம் வரலாறு காணாத அத்துமீறல்!” பிரஸ்மீட்டில் சீரிய மா.சுப்பிரமணியன்!

சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…

4 hours ago

நடிகர் கவுண்டமணி மனைவி காலமானார்!

சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…

5 hours ago