நானா இருந்தால் சாம் கரனை டீம்ல வைக்க மாட்டேன் ! வீரேந்திர சேவாக் ஓபன் டாக் !

Published by
அகில் R

Shewag : நடந்து வரும் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் தற்போதய கேப்டனான சாம் கர்ரனை அணியில் வைக்க மாட்டேன் என சேவாக் அவரது கருத்தை தெரிவித்துள்ளார்.

இந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனான ஷிகர் தவான் காயம் ஏற்பட்டுள்ளதால் கடந்த ஒரு சில போட்டிகளில் அவர் விளையாடுமல் இருந்தார். இதனால் அவருக்கு பதிலாக பஞ்சாப் அணியின் இளம் ஆல்-ரவுண்டரான சாம் கரன் பஞ்சாப் அணியை வழி நடத்திவந்தார். இந்நிலையில், நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் குஜராத் அணியுடன் ஒரு தோல்வியை சந்தித்தது பஞ்சாப் அணி.

இதனால் சாம் கரனும், பஞ்சாப் அணியும் பல கலவையான விமர்சனங்களுக்கு உள்ளாகினர். அதிலும் இந்திய அணியின் முன்னாள் வீரரும், பஞ்சாப் அணியின் முன்னாள் வீரருமான வீரேந்திர சேவாக், பஞ்சாப் அணியின் தற்போதையே கேப்டனான சாம் கரனின் ஃபார்ம் குறித்து அவரது கருத்தை க்ரிக்பஸ்ஸிடம் பேசி இருந்தார்.

அவர் கூறுகையில், “நான் பஞ்சாப் அணியில் இப்பொது இருந்திருந்தால் சாம் கரனை பேட்டிங் ஆல்-ரவுண்டராகவோ அல்லது பவுலிங் ஆல்-ரவுண்டராகவோ அணியில் வைத்திருக்க மாட்டேன். ஏனென்றால், ஒரு சில ரன்கள் பேட்டிங்கில் எடுத்து மற்றும் சில சொல்லும் அளவிற்கு பவுலிங் ஸ்பெல் யார் செய்தாலும் அப்படிப்பட்ட வீரரால் எந்த ஒரு பயனும் அணிக்கு இல்லை.

நீங்கள் ஒன்று பேட்டிங்கில் மட்டும் சிறந்து விளங்க வேண்டும் இல்லை என்றால் சின்ன பேட்டிங்கால் கூட போட்டியையாவது வெல்ல வேண்டும்.  அதே போல பந்து வீசினாலும் வெறித்தனமாக விக்கெட்டுக்காக நீங்கள் வீச வேண்டும் அல்லது பந்து வீசவே கூடாது”, என்று க்ரிக்பஸ்ஸிடம் அளித்த பேட்டியில் சேவாக் பேசி இருந்தார்.

சாம் கரன், நேற்றைய போட்டியில் 2 ஓவர் பந்து வீசி 18 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்திருந்தார். மேலும், பேட்டிங்கில் அவர் தொடக்க வீரராக களமிறங்கி வெறும் 20 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இதனை கருத்தில் கொண்டு தான் விரேந்தர சேவாக் அவரை குறித்து விமர்சித்து பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
அகில் R

Recent Posts

ஆபரேஷன் சிந்தூர்: வீர உரையாற்றிய இந்த சிங்கப்பெண்கள் யார்.? சிலிர்க்கும் பின்னணி..!!

டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…

57 minutes ago

ஆபரேஷன் சிந்தூர் என்றால் என்ன? நள்ளிரவு பயங்கரவாதிகளின் தூக்கம் துளைத்த தரமான சம்பவம்.!

காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…

2 hours ago

10 மாநில முதலமைச்சர்களுடன் அமித் ஷா அவசர ஆலோசனை.!

டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…

2 hours ago

ஆபரேஷன் சிந்தூரில் அசார் குடும்பத்தினர் 10 பேர் உயிரிழப்பு! பயங்கரவாதி வெளியிட்ட பரபரப்பு தகவல்!

இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…

4 hours ago

இந்தியாவின் விண்வெளி சாதனைகள் தனித்துவமானது! பிரதமர் மோடி பெருமிதம்!

டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…

4 hours ago

ஆபரேஷன் சிந்தூர் எதற்காக எப்படி நடத்தப்பட்டது? இந்திய ராணுவம் விளக்கம்!

டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…

5 hours ago