IND vs AFG: நாளை முதல் டி20 போட்டி… விராட் கோலியை சந்தித்த பிசிசிஐ!

Published by
பாலா கலியமூர்த்தி

இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நாளை பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடைபெற உள்ளது. இந்தாண்டு நடைபெற உள்ள ஐசிசி டி20 உலககோப்பைக்கு முன்னதாக இந்தியா விளையாடும் கடைசி டி20 தொடர் இது என்பதால் முக்கிய வாய்தவையாக பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில் இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் டி20 தொடருக்கான அணியில் நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி என இருவருமே இடம் பெற்றுள்ளனர். கிட்டத்தட்ட ஓராண்டு இடைவெளிக்கு பின் இருவரும் டி20 அணிக்கு திரும்பி இருக்கின்றனர். இதனால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இருப்பினும், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் இந்திய வீரர்களின் செயல்பாடுகள் பொறுத்தே டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணி தேர்வு செய்யப்பட உள்ளது. இதனால், இந்தியா – ஆப்கானிஸ்தான் இடையேயான டி20 தொடரில் விராட் மற்றும் ரோஹித் ஆகிய இருவரின் செயல்பாடுகள் உன்னிப்பாக கவனிக்கப்படும்.

இந்தியாவில் நடக்கும் போட்டிகளுக்கு புதிய ஸ்பான்சர்கள் – பிசிசிஐ அறிவிப்பு

இந்த நிலையில், மீண்டும் இந்திய டி20 அணியில் வருவதற்கு முன்னதாக விராட் கோலியை பிசிசிஐ தேர்வாளர்கள் சந்தித்து பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர், விராட் கோலியிடம் அவரது பலவீனம் குறித்து பேசி இருப்பதாக கூறப்படுகிறது. இதன் பின்னரே ஆப்கானிஸ்தான் டி20 தொடரில் இடம் பெற்று இருக்கிறார்.

இந்த சந்திப்பின்போது, சுழற் பந்துவீச்சில் வலுவாக இருக்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விராட் கோலி தன்னை யார் என்று நிரூபித்துக் காட்ட வேண்டும் என்றும் பேட்டிங்கில் அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் குவிக்க வேண்டும் எனவும் விராட் கோலியிடம் இருந்து எதிர்பார்க்கப்படும் விஷயங்கள் குறித்து பிசிசிஐ தேர்வாளர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர். இதனிடையே, ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மான் கில் ஆகியோருடன் இதுபோன்ற விவாதம் நடந்ததா என்பது குறித்து தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

25 minutes ago

சீன மற்றும் துருக்கி ஊடகங்களின் எக்ஸ் கணக்குகள் முடக்கம் – மத்திய அரசு அதிரடி.!

டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…

43 minutes ago

DD Next Level பட பாடல் சர்ச்சை : ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு சந்தானத்துக்கு நோட்டீஸ்.!

சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…

2 hours ago

என்னது டெஸ்ட் போட்டியில் கில் கேப்டனா? டென்ஷனாகி கடுமையாக விமர்சித்த கிரிஸ் ஸ்ரீகாந்த்!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…

2 hours ago

40 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் – டிஐஜி உத்தரவு.!

சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.   வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…

2 hours ago

எல்லை தாண்டி பிடிபட்ட BSF வீரர்…திருப்பி அனுப்பிய பாகிஸ்தான்!

டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…

3 hours ago