அடுத்தடுத்து டக் அவுட்…153 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா ..!

Published by
murugan

தென்னாப்பிரிக்கா இந்தியா ஆகிய அணிகளுக்கு இடையே இன்று 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானதில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி  23.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து முதல் இன்னிங்ஸில் 55 ரன்கள் மட்டுமே எடுத்தது.

தென்னாப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக பெடிங்கம் 12, வெர்ரைன் 15 ரன்கள் மட்டுமே எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கு ரன்களுடன் வெளியேறினர். இந்திய அணியில் முகமது சிராஜ் 6 விக்கெட்களையும் , ஜஸ்பிரித் பும்ரா, முகேஷ் குமார் ஆகியோரும் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினார்கள். இதைத்தொடர்ந்து, இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா இருவரும் களமிறங்கினர். வந்த வேகத்தில் ஜெய்ஸ்வால் டக் அவுட் ஆகி வெளியேறினார்.

இதை எடுத்து சுப்மன் கில் களமிறங்க ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி 39 ரன்கள் எடுத்தார். பின்னர் விராட் கோலி களம் கண்டார். மறுபுறம்  விளையாடி வந்த சுப்மன் கில் 55 பந்தில் 36 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறி கொடுத்தார். இருப்பினும் அடுத்து வந்த ஷ்ரேயாஸ் ஐயர் களமிறங்கிய இரண்டு பந்திலே டக் அவுட் வெளியேற மறுபுறம் நிதானமாக விளையாடி வந்த விராட் கோலி அரைசதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 46 ரன்களில் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார்

அதில் ஆறு பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும். இதை எடுத்து வந்த விக்கெட் கீப்பர் கே.எல் ராகுல் 8 ரன்கள் மட்டுமே எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த ஜடேஜா, பும்ரா, பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் அனைவரும் டக் அவுட் ஆகி வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர். இதனால் இந்திய அணி 34.5 ஓவரில் அனைத்து விக்கெட் இழந்து 153 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 109 ரன்கள் முன்னிலையில் இருந்தது. இதைத் தொடர்ந்து தென்னாபிரிக்க அணி தற்போது தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது.

 

 

Published by
murugan

Recent Posts

இஸ்ரேலும் ஈரானும் சின்ன பசங்க மாதிரி சண்டை போடுறாங்க! டொனால்ட் டிரம்ப் பேச்சு!

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட  இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…

4 hours ago

எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…

5 hours ago

மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு! தமிழக அரசு உத்தரவு!

சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…

5 hours ago

ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…

6 hours ago

பாமக மோதல் : பொறுப்பை பறித்த அன்புமணி… “அவருக்கு அதிகாரமில்லை” டென்ஷனான அருள்!

பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…

6 hours ago

த.வெ.க தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் எப்போது சுற்றுப்பயணம்? ஆதவ் அர்ஜுனா முக்கிய தகவல்!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…

7 hours ago