#Womens World Cup: இந்தியாவிற்கு அடிமேல் அடி .., ஆஸ்திரேலியா அணி த்ரில் வெற்றி..!

Published by
murugan

மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணி மற்றொரு தோல்வியை சந்தித்துள்ளது. ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணியை வீழ்த்தியது.

முதலில் இறங்கிய இந்தியா: 

டாஸ் இழந்து முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. நான்காவது ஓவரில் ஸ்மிருதி மந்தனா (10) பந்தில் அவுட் ஆனார். இதையடுத்து பேட்டிங்கை வலுப்படுத்த ஆல்ரவுண்டர் தீப்தி சர்மாவுக்கு பதிலாக களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர் ஷெபாலி வர்மா 6-வது ஓவரிலேயே 12 ரன்னில் ஆட்டமிழந்தார்.

பின்னர் இறங்கிய மிதாலி 96 பந்துகளில் 68 ரன்களும், யாஸ்திகா பாட்டியா 83 பந்துகளில் 59 ரன்கள் குவித்தனர். 3-வது விக்கெட்டுக்கு இவர்கள் 130 ரன்கள் சேர்த்தனர். அடுத்து இறங்கிய  ஹர்மன்பிரீத் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 47 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 57 ரன்கள் எடுத்தார். இறுதியில் இறங்கிய  பூஜா வஸ்த்ரகர்  28 பந்துகளில் 34 ரன்கள் எடுத்திருந்த அவர் ரன் அவுட் ஆனார். இதனால், இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 277 ரன்கள் எடுத்தனர்.

278 ரன் இலக்கு:

278 ரன்கள் இலக்குடன் ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரேச்சல் ஹைன்ஸ் மற்றும் அலிசா ஹீலி ரீ ஜோடி முதல் விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்த்தனர். 20வது ஓவரில் ஹீலி ஆட்டமிழந்ததார்.  ஹீலி மிதாலியிடம் கேட்ச் கொடுத்தார். அவர் 65 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 72 ரன்கள் எடுத்தார். 21வது ஓவரில் பூஜா வஸ்த்ரகர் ஓவரில் விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷிடம் ரேச்சல் ஹைன்ஸ் கேட்ச் கொடுத்தார்.அவர் 53 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் எடுத்தார்.

97 ரன்கள் குவித்த மெக் லானிங்:

பிறகு கேப்டன் மெக் லானிங், அலிசா பெர்ரியுடன் இணைந்து சிறப்பாக விளையாடினர். இருவரும் 3வது விக்கெட்டுக்கு 103 ரன்கள் சேர்த்தனர். ஆனால் 42-வது ஓவரில் அலிசா பெர்ரி விக்கெட்டை இழந்தவுடன் ஆஸ்திரேலிய அணி சிறிது நேரம் சிக்கலில் தவித்தது. அலிசா பெர்ரி 51 பந்துகளில் ஒரு பவுண்டரி உடன் 28 ரன்கள் எடுத்தார். பின்னர், 49-வது ஓவரில் மெக் லானிங் விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். மெக் லானிங் 107 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் 97 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.

இருப்பினும் பெத் மூனி 20 பந்துகளில் 30* ரன் எடுத்து கடைசிவரை களத்தில் நின்று இறுதியாக அணியை வெற்றி பெற செய்தார். ஆஸ்திரேலியா 49.3 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து 280 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அரையிறுதிக்கு செல்வது கடினம்:

இந்த தோல்வியால் இந்தியா அரையிறுதிக்கு செல்வதை கடினமாக்கியது. ஆஸ்திரேலியா அணி விளையாடிய 5 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா விளையாடிய 5 போட்டிகளில் இது மூன்றாவது தோல்வியாகும். முன்னதாக இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்திலும், நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 62 ரன்கள் வித்தியாசத்திலும் தோல்வியடைந்திருந்தது.

அதே சமயம், பாகிஸ்தான் அணிக்கு எதிராக 107 மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக  155 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது.

 

Published by
murugan
Tags: CWC22INDvAUS

Recent Posts

இங்கிலாந்துக்கு எதிரான இந்திய டெஸ்ட் தொடரில் தமிழர்கள்.! யார் அந்த இருவர்?

இங்கிலாந்துக்கு எதிரான இந்திய டெஸ்ட் தொடரில் தமிழர்கள்.! யார் அந்த இருவர்?

டெல்லி : இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்தியாவின் புதிய டெஸ்ட் கேப்டனாக ஷுப்மான் கில் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த சுற்றுப்பயணத்திற்கான துணை…

4 hours ago

“படம் வந்ததே நிறைய பேருக்கு தெரில.. எங்க மேலதான் தப்பு”- விஜய் சேதுபதி வருத்தம்!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் 51-வது படமான ''Ace'' திரைப்படம் நேற்று (மே 23) அன்று திரையரங்குகளில் வெளியானது.…

4 hours ago

நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னவெல்லாம் வலியுறுத்தினார்.?

டெல்லி : வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தலைப்பில் பிரதமர் மோதி தலைமையில், நிதி ஆயோக்கின் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. டெல்லியில்…

5 hours ago

BSF வீரர்கள் சொல்ல சொல்ல கேட்கல.., எல்லை தாண்டிய பாக். நபர் சுட்டுக்கொலை.!

குஜராத் : பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் எல்லை தாண்டி வந்த பாகிஸ்தானியரை சுட்டுக் கொன்றதாக இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை…

5 hours ago

டெஸ்ட் கேப்டனாக சுப்மன் கில் நியமனம்..! இந்திய அணி Squad இதுதான்!

டெல்லி : வருகின்ற ஜூன் 20 ஆம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான…

8 hours ago

”ED அல்ல மோடிக்கும் பயப்பட மாட்டோம்” – முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.!

சென்னை : டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். முன்னதாக,…

8 hours ago