AUSvIND: 4 வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று வரலாற்று சாதனை!

Published by
Surya

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்யாசத்தில் அபார வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது.

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி, பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 369 ரன்கள் எடுத்ததை தொடர்ந்து இந்திய அணி, 336 ரன்கள் அடித்தது. பின்னர் நடைபெற்ற இரண்டாம் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி, 294 ரன்களுக்கு தனது அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இதில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 55 ரன்களும், வார்னர் 48 ரன்கள் அடித்தார். பந்துவீச்சை பொறுத்தளவில் சிராஜ் தலா 5 விக்கெட்களும், ஷர்த்துல் தாக்குர் தலா 4 விக்கெட்களையும் வீழ்த்தி அசத்தினார்கள். 328 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா – சுப்மன் கில் களமிறங்கினார்கள். 1.5 ஆம் ஓவர் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் கூட இழக்காமல் 4 ரன்கள் எடுத்தது.

மழை குறுக்கிட்டதால் நான்காம் நாள் ஆட்டம் முடிவடைந்தது. அதன்படி, 324 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி, இன்றைய இறுதிநாள் ஆட்டத்தை தொடங்கியது. போட்டி தொடங்கிய சிறிது நேரத்தில் ரோஹித் சர்மா 7 ரன்கள் மட்டுமே அடித்து வெளியேறினார். அவரைத்தொடர்ந்து புஜாரா களமிறங்கினார்கள். நிதானமாக ஆடிவந்த புஜாரா, சுப்மன் கில்லுடன் இணைந்தார். இருவரும் பொறுமையாக ஆடிவந்த நிலையில், 91 ரன்கள் அடித்து சுப்மன் கில் தனது விக்கெட்டை இழந்தார்.

அவரைதொடர்ந்து களமிறங்கிய ரஹானே, 24 ரன்கள் மட்டுமே அடித்து வெளியேற, மறுமுனையில் இருந்த புஜாரா 56 ரன்கள் அடித்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய ரிஷப் பந்த் பொறுமையாக ஆடிவந்தார். பின்னர் களமிறங்கிய மயங்க் அகர்வால் 9 ரன்களில் வெளியேற, அவரையடுத்து களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர், ரிஷப் பந்துடன் இணைந்தார். பின்னர் இருவரும் அதிரடியாக ஆடத் தொடங்கினார்கள்.

53 பந்துக்கு 50 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அதிரடியான ஆட்டத்தை வாஷிங்டன் சுந்தர் வெளிக்காட்டினார். 22 ரன்கள் அடித்து வாஷிங்டன் சுந்தர் வெளியேறியதை தொடர்ந்து, நவதீப் சைனி களமிறங்கினார். 3 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், ரிஷப் பந்த் 4 ரன்கள் அடித்து இந்திய அணியை 4 ஆம் டெஸ்ட் போட்டியை வெற்றிபெற செய்தார்.

இதன்மூலம் இந்திய அணி, 3 விக்கெட் வித்தியாசத்தில் நான்காம் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று, ஆஸ்திரேலிய மண்ணில் பார்டர் கவாஸ்கர் தொடரை 2 – 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. மேலும், 2 டெஸ்ட் தொடர்களில் வென்று இந்திய அணி வரலாற்று சாதனை படைத்தது.

Published by
Surya

Recent Posts

சிதம்பரம் கோயில் தரிசன விவகாரம் – அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.!

சிதம்பரம் கோயில் தரிசன விவகாரம் – அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.!

கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோயில் தரிசன விவகாரம் தொடர்பாக, கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்வது குறித்து சென்னை உயர்…

10 hours ago

தென்மேற்கு பருவமழை இயல்பிற்கு அதிகமாக மழை பெய்யும் – இந்திய வானிலை மையம்.!

சென்னை : தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய 2 மாதத்தில் இயல்பிற்கு அதிகமாக மழைப் பொழிவு பதிவாகும் என…

10 hours ago

தி.மு.க-வுடன் கூட்டணியா? – ஓபிஎஸ் அளித்த பதில் என்ன?

சென்னை : பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக பன்னீர்செல்வம் அறிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்தார். இன்று காலையில்…

11 hours ago

சூடு பிடிக்கும் அரசியல் களம்: ஒரே நாளில் 2வது முறையாக முதல்வர் ஸ்டாலினுடன் ஓபிஎஸ் சந்திப்பு.!

சென்னை : இன்று காலை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறினார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிகார்பூர்வமாக அறிவித்தார். சமீபத்தில்,…

12 hours ago

5-வது டெஸ்ட் போட்டி: தடுமாறும் இந்திய அணி.., ஜெய்ஸ்வால் – கே.எல்.ராகுல் சொற்ப ரன்களில் அவுட்.!

ஓவல் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதிப்…

12 hours ago

ஆணவக் கொலை வழக்கு : ஆவணங்களை சிபிசிஐடியிடம் ஒப்படைத்தது காவல்துறை.!

நெல்லை : தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் (வயது…

13 hours ago