தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி 243 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த இந்தியா ..!

Published by
murugan

நடப்பு ஐசிசி உலகக்கோப்பை ஒருநாள் போட்டியில் 36 லீக் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மோதியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக ரோஹித் , சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர். இவர்களின் தொடக்கம் சிறப்பாக அமைந்தது.

அதிலும் ரோஹித் வழக்கம் போல சிறப்பாக விளையாடினார். அரைசதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் ரோஹித் 40 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். இவர்களின் கூட்டணியில் 62 ரன்கள் சேர்க்கப்பட்டது. அடுத்து இந்திய அணியின் அதிரடி வீரர் கிங் கோலி களமிறங்கினார். மறுபுறம் விளையாடி வந்த சுப்மன் கில் நிதானமாக 23 ரன்கள் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.

பின்னர்  ஷ்ரேயாஸ் ஐயர், கிங் கோலி இருவரும் தென்னாபிரிக்கா அணியின் பந்து வீச்சாளர்களின் பந்துகளை நாலாபுறமும் பறக்கவிட்டனர். இவர்களின் விக்கெட்டை பறிக்க முடியாமல் பந்து வீச்சாளர்கள் திணறினர். இதற்கிடையில் இருவரும் அரைசதம் விளாசினார். இருப்பினும் சிறப்பாக விளையாடி வந்த ஷ்ரேயாஸ் ஐயர் 87 பந்தில் 7 பவுண்டரி , 2 சிக்ஸர் என 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.  அடுத்து வந்த ராகுல் வந்த வேகத்தில் 8 ரன்னில் வெளியேறினார்.

பின்னர் களத்திற்கு வந்த சூர்யகுமார் யாதவ் 5 பவுண்டரி விளாசி 22 ரன்னில் விக்கெட் கீப்பர் குயிண்டன் டி காக்கிடம் கேட்சை கொடுத்து நடையை கட்டினார். கடைசியில் இறங்கிய ரவீந்திர ஜடேஜா வந்த வேகத்தில் 3 பவுண்டரி, 1 சிக்ஸர் என மொத்தம் 29 ரன்கள் குவித்தார். இதற்கிடையில் மறுபுறம் நிதானமாக விளையாடி  வந்த கிங் கோலி சதம் விளாசினார்.

இந்த சதம் மூலம் ஒருநாள் போட்டியில் கோலி 49-வது சதத்தைப் பதிவு செய்து  ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார். இறுதியாக இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 326 ரன்கள் குவித்தது. கடைசிவரை களத்தில் கோலி 101* ரன்களுடனும் , ஜடேஜா 29 ரன்களுடனும் இருந்தனர்.

தென்னாப்பிரிக்கா அணி 327 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்  தென்னாபிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக தேம்பா பாவுமா, குயிண்டன் டி காக் களமிறங்கினர். 2 ஓவரை முகமது சிராஜ் வீசிய போது அந்த ஓவரின் 4-வது பந்தில் நடப்பு உலககோப்பையில் 4 சதங்கள் விளாசி அதிரடி காட்டி வந்த தென்னாப்பிரிக்க வீரர் குயிண்டன் டி காக் ரன் எடுக்காமல் டக் அவுட் ஆகி விக்கெட்டை பறிகொடுத்தார்.

அடுத்து ராஸ்ஸி வான் டெர் டுசென் களமிறங்க மறுபுறம் விளையாடி வந்த தொடக்க வீரர் தேம்பா பாவுமா ஜடேஜா வீசிய முதல் ஓவரில் 11 ரன் எடுத்து போல்ட் ஆனார். பின்னர் ஐடன் மார்க்ராம் வந்த வேகத்தில் ஷமி ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரி விளாசி அடுத்த பந்திலே விக்கெட் கீப்பர் ராகுலிடம் கேட்சை கொடுத்து 9 ரன்னில் வெளியேறினார்.

அடுத்து வந்த ஹென்ரிச் கிளாசென் 11 பந்தில் வெறும் 1 ரன் எடுத்து ஜடேஜா ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்த ஓவரில் களத்தில் விளையாடி வந்த ராஸ்ஸி வான் டெர் டு அவுட் ஆனார். இதனால் தென்னாபிரிக்கா அணி 13 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து  40 ரன்கள் மட்டுமே எடுத்து பரிதாபமான நிலையில் இருந்தது. பின்னர் களமிறங்கிய வீரர்கள் நிலைத்து நிற்காமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர்.

அதன்படி கேசவ் மகாராஜ் 7, டேவிட் மில்லர் 11, மார்கோ ஜான்சன் 14, ராபடா 6 ரன்னில் விக்கெட்டை இழந்தனர். இறுதியில் தென்னாபிரிக்கா அணி 27.1  ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 83 ரன்கள் எடுத்து 243 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் ஜடேஜா 5 விக்கெட்டையும் ஷமி, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டையும், சிராஜ் 1 விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.

இந்த வெற்றி மூலம் நடப்பு உலக்கோப்பையில் விளையாடிய 8 போட்டிகளில் ஒரு போட்டியில் கூட தோல்வியை தழுவாமல் அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்று 16 புள்ளிகளுடன் முதல் இடத்தை தக்க வைத்துள்ளது.

 

Published by
murugan

Recent Posts

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

2 hours ago

தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்… சில்லி சில்லியாய் நொறுக்கிய இந்தியா.! சிதறி கிடக்கும் ஏவுகணை, ட்ரான் பாகங்கள்.!

டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…

2 hours ago

பாகிஸ்தான் ராணுவ முகாம்களை தாக்கி அழித்த காட்சிகளை வெளியிட்டது இந்திய ராணுவம்.!

டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…

3 hours ago

விராட் கோலி ஓய்வு? பிசிசிஐ உடன் ரகசிய பேச்சுவார்த்தை..,

டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…

3 hours ago

“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…

3 hours ago

ராணுவத்திற்கு உதவ நாங்க தயார்! சண்டிகரில் குவியும் இளைஞர்கள்!

சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…

3 hours ago