இந்திய அணி , வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நேற்று முதல் டி -20 போட்டியை புளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் விளையாடியது.இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச முடிவு செய்து உள்ளது.
முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்க வீரர்களாக ஜான் காம்ப்பெல், எவின் லூயிஸ் இருவரும் களமிறங்கின. ஆட்டம் தொடக்கத்திலே எவின் லூயிஸ் , ஜான் காம்ப்பெல் இருவரும் ரன்கள் எடுக்காமல் வெளியேறினார்.
இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி திணறியது.பிறகு இறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேறினர். இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 95 ரன்கள் எடுத்தது.
96 ரன்கள் இலக்குடன் இறங்கிய இந்திய அணி ரோஹித் (24) , விராட் (19) , மனீஷ் பாண்டே (19) ஆகியோரின் நிதானமான ஆட்டத்தால் இந்திய அணி 17.2 ஓவரில் இந்திய அணி 98 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இதன் மூலம் அந்நிய மண்ணில் இந்திய அணி 50 முறையாக வெற்றி பெற்று உள்ளது .இந்த சாதனையை இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் பகிர்ந்து உள்ளது. இந்திய அணி இதுவரை விளையாடிய 116 டி 20 போட்டிகளில் 71 போட்டிகளில் வெற்றி பெற்று உள்ளது.
பாகிஸ்தான் அணி இதுவரை விளையாடிய 143 டி 20 போட்டிகளில் 90 போட்டிகளில் வெற்றி பெற்று உள்ளது.இந்நிலையில் இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் அந்நிய மண்ணில் அதிக முறை வெற்றி பெற்ற அணி என்ற புதிய சாதனையை படைக்கும்.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…