இந்தியா -நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி போட்டி இன்று இரவு 7 மணிக்கு கொல்கத்தாவில் நடைபெற உள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரண்டு போட்டிகளில் முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது.
இத்தொடரின் கடைசி ஆட்டம் இன்று இரவு 7 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியை வெற்றிபெறும் பட்சத்தில் நியூஸிலாந்தை ஒயிட்வாஷ் செய்யும். அதே நேரத்தில் நியூஸிலாந்து அணி ஆறுதல் வெற்றி பெறவேண்டும் என்ற முனைப்புடன் விளையாடவுள்ளது.
முதல் இரண்டு போட்டிகளில் அடுத்தடுத்து வெற்றி பெற்று இந்தியா ஏற்கனவே தொடரை கைப்பற்றியுள்ளது. இதனால், வேகப்பந்து வீச்சாளர் அவேஷ் கான் மற்றும் இளம் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் போன்றோர் காத்திப்பு வீரர்கள் பட்டியலில் உள்ளதால் உலகத்தரம் வாய்ந்த எதிரணிக்கு எதிராக இளம் வீரர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த இந்தியா வாய்ப்பு அளிக்கலாம் என கூறப்படுகிறது. இரு அணிகளுக்கிடையில் டெஸ்ட் போட்டி வரும் 25-ஆம் தேதி நடைபெறுகிறது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…