INDvsENG : இந்தியா அதிரடி! இரண்டாம் நாள் முடிவில் 175 ரன்கள் முன்னிலை!

Published by
பால முருகன்

இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையே நடக்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ் (நாள் 1) 

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 64.3 ஓவர்களில் 10 விக்கெட்களை இழந்து 246 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்டோக்ஸ் 70, பேர்ஸ்டோவ் 37, டக்கெட் 35, ரன்கள் எடுத்தனர். இந்திய அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில், ரவீந்திர ஜடேஜா 3, அஷ்வின் 3, அக்சர் படேல் , பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தி அசத்தினார்கள்.

இந்தியா முதல் இன்னிங்ஸ்

இங்கிலாந்து அணியை தொடர்ந்து தங்களுடைய முதல் இன்னிங்கிஸை தொடங்கிய இந்திய கிரிக்கெட் அணியில் ரோஹித் சர்மா 27 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து அட்டமிழந்து வெளியேறினார். பிறகு முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 119 ரன்களை குவித்து இருந்தது.

இப்படியா ரன் அடிப்பீர்கள்… சுப்மான் கில்லை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்..!

இரண்டாம் நாள் ஆட்டம் 

இந்தியா தரப்பில் அதிகபட்சமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 76 ரன்களை குவித்து அவுட் ஆகாமல் இருந்தார். அவருடன் களத்தில் சுப்மன் கில் 14 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அதனை தொடர்ந்து இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் சுப்மன் கில் அவுட் ஆனார். அதைப்போல ஜெய்ஸ்வால் 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பிறகு களமிறங்கிய கே.எல்.ராகுல் மற்றும்  ஷ்ரேயாஸ் ஐயர் களத்தில் நின்று கொண்டு நிதானமாக விளையாடினார்கள். அதிலும் குறிப்பாக கே.எல்.ராகுல்  80 ரன்கள் எடுத்த பிறகு தான் ஆட்டத்தை இழந்து வெளியேறினார். ஷ்ரேயாஸ் ஐயர் 35 ரன்கள் எடுத்து அட்டமிழந்து வெளியேறினார்.

இரண்டாம் நாள் ஆட்டம் முடிவு

அதன்பின் களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா அதிரடியாக விளையாடி 80 ரன்களை குவித்து களத்தில் இருக்கிறார். அவருடன் அக்சர் படேலும் 35 ரன்கள் எடுத்து களத்தில் நிற்கிறார். இந்நிலையில், இரண்டாவது நாள் முடிவில் இந்திய அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 110 ஓவருக்கு 7 விக்கெட் இழப்பிற்கு 421  ரன்கள் எடுத்துள்ளது. இதன்முலம் இந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 175 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. நாளை மூன்றாவது நாள் ஆட்டத்தில் இந்தியா மீண்டும் பேட்டிங்கை தொடங்கும்.

இரண்டாம் நாள் முடிவின் அடிப்படையில், இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் ஜோ ரூட், டாம் ஹார்ட்லி ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், ஜாக் லீச்.ரெஹான் அகமது ஆகியோர் தலா 1 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளனர்.

Published by
பால முருகன்

Recent Posts

போர் நிறுத்தம் அமெரிக்காவுக்கு தொடர்பு இல்லை..மீண்டும் விளக்கம் கொடுத்த அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர்…

15 minutes ago

நீங்க இல்லைனா என்ன நான் இருக்கேன்…சர்ச்சை கொண்டாட்டத்தை செய்த ஆகாஷ் சிங்!

அகமதாபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தொடரின் 64-வது போட்டி நேற்று நரேந்திர மோடி…

47 minutes ago

கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் தகவல்!

சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 2-3 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…

2 hours ago

மாணவர்களே ஜூன் 2 பள்ளிகள் திறப்பு! முன்னேற்பாடு செய்ய உத்தரவிட்ட பள்ளிக்கல்வித்துறை!

சென்னை : தமிழ்நாட்டில் 2025-2026 கல்வியாண்டிற்காக அரசு, அரசு உதவி பெறும், மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 2, 2025 அன்று…

2 hours ago

“உங்க ரத்தம் கேமரா முன் மட்டும் ஏன் கொதிக்கிறது?” -பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி!

ராஜஸ்தான் : நேற்று தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி ராஜஸ்தான் பிகானரில் இருந்து காணொளி மூலம்…

2 hours ago

கட்டுப்பாட்டை இழந்த கார்…விபத்தில் உயிரிழந்த திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தி!

கோவை : மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில், அதிமுக முன்னாள் அமைச்சரும், கட்சியின் பொருளாளருமான திண்டுக்கல்…

3 hours ago