India vs Australia: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பவுலிங்!

Published by
பாலா கலியமூர்த்தி

உலக கோப்பை தொடருக்கு முன்னதாக, ஆஸ்திரேலிய அணியுடன் இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதற்காக  இந்தியா வந்துள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் மட்டுமே உலக கோப்பைக்கு முன்னர் நடைபெறும்.டி20 கிரிக்கெட் தொடர் ஒருநாள் உலக கோப்பை முடிந்த பிறகு நடைபெற உள்ளது.

எனவே, இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியானது இன்று மொகாலியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை செய்தது. அதன்படி, முதலில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து வருகிறது. மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, தற்போது கேஎஸ் ராகுல் தலைமையிலான இளம் இந்திய அணி இன்று ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது.

தற்போது, ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 9 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. களத்தில் டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் விளையாடி வருகின்றனர்.

ஆஸ்திரேலியா (விளையாடும் XI): டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுஷாக்னே, கேமரூன் கிரீன், ஜோஷ் இங்கிலிஸ்(w), மார்கஸ் ஸ்டோனிஸ், மேத்யூ ஷார்ட், பாட் கம்மின்ஸ்(c), சீன் அபோட், ஆடம் ஜாம்பா ஆகியோர் உள்ளனர்.

இந்தியா (விளையாடும் XI): ஷுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல்(w/c), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

10 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

11 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

12 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

12 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

15 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

16 hours ago