#INDvsNZ: சூப்பர் ஒவரில் திரில் வெற்றி ! தொடரை வென்றது இந்தியா

Published by
murugan

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று 3-வது டி-20 போட்டி நடைபெற்றது.விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் நியூசிலாந்து அணி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட  180 ரன்களில் 179 ரன்கள் மட்டுமே அடித்ததால் ஆட்டம் சமனில் முடிய,சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.   

இந்தியா , நியூசிலாந்து அணிகள் 3-வது டி -20  போட்டி ஹாமில்டனில் உள்ள செடான் பார்க் மைதானத்தில்விளையாடியது.இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் தனது பேட்டிங்கை தொடங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் மற்றும் ராகுல் ஆகியோர் களமிறங்கினர்.இவர்களின்   சிறப்பான தொடக்கத்தால் இந்திய அணியின் எண்ணிக்கை சற்று உயர்ந்தது. அப்போது  ராகுல் 27 ரன்களில் வெளியேறி , அடுத்தபடியாக  இறங்கிய சிவம் துபே 3 ரன்களில் வந்த வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

மறுமுனையில் ரோகித் தனது அதிரடி ஆட்டத்தால் 20-வது அரை சதத்தை நிறைவு செய்தார். பின்பு ரோகித் 65 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் இறங்கிய கோலி தனது பங்கிற்கு 38 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 17 ரன்களும் அடித்தனர். இறுதியாக இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 179 ரன்கள் அடித்துள்ளது. களத்தில் ஜடேஜா 10*,பாண்டே 14* ரன்களுடனும்  இருந்தனர். நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் பெனட்  3  விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 180  ரன்கள் அடித்தால் வெற்றி  என்ற இலக்குடன் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக மார்ட்டின் குப்டில் , கொலின் மன்ரோ இருவரும் இறங்கினர். தொடக்கத்திலே அதிரடியாக விளையாடிய மார்ட்டின் 31 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர் கேப்டன் கேன் வில்லியம்சம் களமிறங்கினார். வில்லியம்சம் இறங்கிய சில நிமிடங்களில் கொலின் மன்ரோ 14 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.

இதையெடுத்து கேப்டன் கேன் வில்லியம்சம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார்.பின்னர் இறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற கேன் வில்லியம்சம் கடைசிவரை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 95 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.

இறுதியாக நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 179 ரன்கள் அடித்தனர்.இதனால் போட்டி சமனில் முடிந்தது.எனவே சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது.இதன் படி முதலில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.இதில் ஒரு ஒவரில் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி  17 ரன்கள் அடித்தது.வில்லியம்சன் 12*ரன்கள்,குப்தில் 5* ரன்களும் அடித்தனர்.இதனையடுத்து 18 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.இந்திய அணி 1 ஒவரில் 20 ரன்கள் அடித்து வெற்றிபெற்றது.களத்தில் ரோகித் 15 * ,ராகுல் 5 ரன்களுடனும் இருந்தனர்.இதனால் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி -20  தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

Published by
murugan

Recent Posts

ஈரானில் நடந்த தாக்குதலில் 5 இந்திய மாணவர்கள் காயம்.!

ஈரானில் நடந்த தாக்குதலில் 5 இந்திய மாணவர்கள் காயம்.!

ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…

35 minutes ago

போர் எப்போது.? ”நான் என்ன செய்யப் போகிறேன் என்று யாருக்கும் தெரியாது” – டிரம்ப் சூசக பதில்.!

அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…

38 minutes ago

தமிழகம் முழுவதும் ஜூலை 9ம் தேதி டாஸ்மாக் வேலை நிறுத்தம் – டாஸ்மாக் பணியாளர் சங்கம்.!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…

1 hour ago

“கீழடி.., பாஜகவின் புராணக் கதைகள் அல்ல” – விஜய் கடும் விமர்சனம்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…

3 hours ago

“இது என்னுடைய நேரம்.., நான் என்னை மாற்றிக் கொள்ளவில்லை” – நடிகர் அஜித்குமார்.!

சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…

3 hours ago

டாஸ்மாக் வழக்கு: ”அமலாக்கத்துறை ஆவணங்கள் போதுமானது அல்ல” – ஐகோர்ட் அதிரடி உத்தரவு.!

சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…

3 hours ago