கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய ஸ்ரேயாஸ் ஐயர் .! 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

Published by
murugan
  • இன்று இந்தியா ,நியூசிலாந்து இடையே முதல் டி20 போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்றது.
  • இப்போட்டி முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

இந்திய அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்து அங்கு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக சென்று உள்ளது.அதன்படி இன்று  முதல் டி20  போட்டியில் ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.அதன்படி நியூசிலாந்து அணி முதலில் தனது பேட்டிங்கை தொடங்கியது.தொடக்க ஆட்டக்காரர்களாக கப்டில் (30), முன்ரோ (59) ரன்கள் அடித்து ஆட்டம் தொடக்கத்திலே அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.

Image

பின்னர் இறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சன் , ரோஸ் டெய்லர் இருவரும் அரைசதம் அடித்து இந்திய அணிக்கு இமாலய இலக்கு வைத்தனர். 20 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்கள் அடித்தனர்.இந்திய அணியில் பூம்ரா ,தாகூர்,சாகல்,துபே ,ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்கள்.இதனையடுத்து 204 ரன்கள் அடித்தால் இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக ரோஹித் , கே.எல் ராகுல் இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே ரோஹித் சர்மா 7 ரன்னில் விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தார். பின்னர் இறங்கிய  கேப்டன் கோலி , கே.எல் ராகுலுடன் கைகோர்த்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார்.

சிறப்பாக விளையாடிய கே.எல் ராகுல் அரைசதம் அடித்து 56 ரன்கள் குவித்தார்.பின்னர் அடுத்த சில நிமிடங்களில் கேப்டன் கோலி அரைசதம் அடிக்காமல் 45 ரன்னில் வெளியேறினர்.இதைத்தொடர்ந்து இறங்கிய சிவம் துபே சொற்ப ரன்களில் ஆட்டத்தை இழந்தார்.

பின்னர் இக்கட்டான சூழ்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் , மனிஷ் பாண்டே இருவரும் கூட்டணி அமைத்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இறுதியாக இந்திய அணி 19-வது ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் அடித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.களத்தில் ஐயர் 58*,பாண்டே 14* ரன்களுடன் இருந்தனர்.இந்த வெற்றியின் மூலமாக இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

Published by
murugan

Recent Posts

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

15 minutes ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

1 hour ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

1 hour ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

2 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

2 hours ago

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…

4 hours ago