தோனி ஸ்டைலில் ஓய்வை அறிவித்தார் இந்திய வீரர் கேதார் ஜாதவ்!

Published by
அகில் R

கேதார் ஜாதவ் : கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர்16ம் தேதி அன்று இந்திய கிரிக்கெட் அணிக்காக கேதர் ஜாதவ்  இலங்கைக்கு எதிரான சர்வேதச ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். அதே போல அடுத்த ஆண்டான 2015-ல் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக தனது சர்வதேச டி20 போட்டியிலும் அறிமுகமானார்.

இவர் மொத்தமாக 73 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 1389 ரன்களை எடுத்துள்ளார். அதில் 6 அரை சதங்களும், 2 சதங்களும் அடங்கும். மேலும், 9 சர்வேதச டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடி 122 ரன்களை எடுத்து, ஒரு அரை சதத்தையும் எடுத்துள்ளார். இவர் ஐபிஎல் தொடரில் சென்னை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிக்காக விளையாடி இருக்கிறார்.

ஐபிஎல் தொடரில் மட்டும் 95 போட்டிகளில் விளையாடி 1208 ரன்கள் எடுத்துள்ளார். சிஎஸ்கே அணியில் சரியாக விளையாடததன் காரணமாக இவர் கடுமையான விமர்சனங்களையும் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, இவர் அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

‘தல’ தோனி தனது ஓய்வை அறிவித்தது போல தற்போது அவரது ஸ்டைலில் இவரும் தனது ஓய்வை அறிவித்துள்ளார். அதாவது, தோனி தான் இந்திய அணிக்காக விளையாடிய மொத்த நேரத்தையும் பதிவிட்டு நன்றி கூறி ஓய்வை அறிவித்திருந்தார்.

அதே போல கேதர் ஜாதவும் தனது X தள பக்கத்தில்,” எனது கிரிக்கெட் வாழ்க்கையில் 1500 மணி நேரம் முழுவதும் அன்பும், ஆதரவும் அளித்த உங்கள் அனைவருக்கும் நன்றி, அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதாக கருதி கொள்ளுங்கள்”, என பதிவிட்டு தோனி ஸ்டைலில் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

Published by
அகில் R

Recent Posts

தூத்துக்குடி விமானத்தில் இயந்திர கோளாறு! அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தம்!

தூத்துக்குடி விமானத்தில் இயந்திர கோளாறு! அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தம்!

தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…

16 minutes ago

விருதுநகர் : பட்டாசு ஆலையில் வெடி விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

விருதுநகர் : மாவட்டம் சாத்தூர் அருகே கீழ தாயில்பட்டியில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலையில் ஜூலை 6, 2025…

59 minutes ago

சபாஷ் சரியான போட்டி…குகேஷை அசால்ட்டாக வீழ்த்திய பிரக்ஞானந்தா!

குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட் அண்ட் பிளிட்ஸ் 2025 போட்டியில், பிளிட்ஸ்…

2 hours ago

மகளிர் உரிமைத்தொகை பெற நாளை முதல் விண்ணப்பம்!

சென்னை: தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதற்காக விண்ணப்பங்கள் ஜூலை…

3 hours ago

தற்காலிகமாக விலகிய தவெக ஆலோசகர் பிரசாந்த் கிஷோர்! காரணம் என்ன?

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் உத்திகளை வகுக்க, திமுக, அதிமுக,…

3 hours ago

ட்ரம்ப்புடன் மோதல்..புதிய கட்சியை தொடங்கியதாக அறிவித்த எலான் மஸ்க்!

நியூயார்க் : உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க், ‘தி அமெரிக்க…

4 hours ago