தென்னாபிரிக்காவை த்ரில்லாக வீழ்த்தி ..17 வருடங்களுக்கு மீண்டும் சாம்பியனான இந்திய அணி..!

Published by
அகில் R

டி20 உலகக்கோப்பை : 1 மாதங்களாக நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டி இன்று பார்படாஸ் மைதானத்தில் நடைபெற்றது. கிரிக்கெட் வரலாற்றில் மிகமுக்கியமான போட்டியான இந்த போட்டியானது இன்று தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி பேட்டிங் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரரான ரோஹித் சர்மா சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினார்.

அதன்பிறகு அவரை தொடர்ந்து ரிஷப் பண்ட் ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதன்பின் சூர்யா குமார் யாதவும் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிரிச்சியளித்தார். இதனால் 34-3 என இந்திய அணி தடுமாறியது.

பின் களமிறங்கிய அக்சர் பட்டேல், விராட் கோலியுடன் இணைந்து அருமையாக ஜோடி சேர்ந்து விளையாடினார். இருவரின் அதிரடி கூட்டணியில் இந்தியா அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

இதுவரை பல விமர்சனங்களுக்கு உள்ளான விராட் கோலி இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடி 76 ரன்கள் குவித்தார். இதன் காரணமாக இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 176 ரன்கள் எடுத்தனர்.

அதன் பிறகு 177 என்ற இலக்கை அடிப்பதற்கு பேட்டிங் களம் இறங்கியது தென்னாப்பிரிக்கா  அணி முதலில் 2 விக்கெட் தொடர்ச்சியாக இழந்தாலும், அதன் பிறகு ஜோடி சேர்ந்த டி காக்கும் ஸ்டப்ஸும் இணைந்து அதிரடியான ரண்களை குவித்தனர்.

பின் அதிரடியாக விளையாடிய ஸ்டெப்ஸ் 31 ரன்களுக்கும்,  ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து டி காக் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பிறகு களமிறங்கிய கிளாசன் அதிரடியாக விளையாடி ரன்களை விரைவாக சேர்த்தார். அவர் 27 பந்துக்கு 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அதன் பின் பும்ராவின் பந்து வீச்சில் யான்சன் விக்கெட்டை இழந்தார். இதனால் போட்டி இந்திய அணியின் பக்கம் சரிய தொடங்கியது. ஆனால் ஒரு பக்கம் மில்லர் களத்தில் இருந்து விளையாடி கொண்டிருந்தார்.

இந்நிலையில், கடைசி 6 பந்துக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த ஓவரை வீச பாண்டியா வந்தார், மேலும் ஸ்ட்ரைக்கில் மில்லர் இருந்தார். அதன்படி முதல் பந்தை வீசிய பாண்டியாவின் பந்தை சிக்ஸர் அடிக்க முயன்ற மில்லர், சூரியகுமார் யாதவின் பிரமாதமான கேட்சில் அவுட் ஆனார்.

அடுத்த பந்தை ரபாடா பவுண்டரி அடித்தவுடன் மேலும் விறுவிறுப்பாக போட்டி சென்றது, கடைசி 2 பந்துக்கு 9 ரன்கள் அடிக்க வேண்டி இருந்த நிலையில் அந்த பந்தில் ரபாடா விக்கெட்டை பாண்டியா எடுத்தார்.

இதன் மூலம் இந்திய அணி வெற்றியை உறுதி செய்தது, இதனால் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றனர். 17 வருடங்களுக்கு பிறகு 20 ஓவர் உலகக்கோப்பையை இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ளது.

இதனால் மைதானத்தில் இந்திய அணி வீரர்கள் ஆனந்த கண்ணீருடன் கட்டி அணைத்து வெற்றியை கொண்டாடி வந்தனர்.

Published by
அகில் R

Recent Posts

திருவள்ளூர் ரயில் விபத்து: ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.!

சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…

5 hours ago

2 ஆவது விக்கெட்டை வீழ்த்தி சிராஜ் அசத்தல்! இங்கிலாந்து அணி கதறல்!

லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…

6 hours ago

இயக்குநர் பா.ரஞ்சித் படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழப்பு.!

சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…

6 hours ago

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!

சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…

7 hours ago

புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் தற்கொலை.! நடந்தது என்ன.?

உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

7 hours ago

பாலியல் வன்கொடுமை.., பொதுவெளியில் தண்டனை அளித்த ஈரான் அரசு.!

புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…

8 hours ago