பங்களாதேஷ் அணியிடம் போராடி வெற்றி பெற்ற இந்தியா! அரை இறுதிக்கு முன்னேற்றம் !

Published by
murugan

இன்றைய போட்டியில் இந்திய அணியும் ,பங்களாதேஷ் அணியும் மோதியது.இப்போட்டி பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில்  டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

  முதலில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கே.எல் ராகுல் , ரோஹித் சர்மா இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே இருந்து அதிரடியாக இருவருமே விளையாடி வந்தனர்.இப்போட்டியில் ரோஹித் சர்மா தன்னுடைய அதிரடி ஆட்டத்தால் 92 பந்தில் 104 ரன்கள் குவித்தார்.

பின்னர் அடுத்த வீரராக விராட் கோலி களமிறங்கினர்.நிதானமாக விளையாடி வந்த கே.எல் ராகுல் 77 ரன்னில் வெளியேறினர்.பிறகு ரிஷாப் பந்த் , விராட் கோலி இருவரின் கூட்டணியில் அணியின் எண்ணிக்கை சற்று உயர்ந்தது.

கேப்டன் கோலி நிதானமாக விளையாடி 26 ரன்னில் அவுட் ஆனார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரிஷாப் பந்த் 48 ரன்கள் அடித்தார். பின்னர் மத்தியில் களமிறங்கிய தோனி அதிரடி ஆட்டத்தை காட்டாமல் நிதானமாக விளையாடி 35 ரன்னில்  விக்கெட்டை இழந்தார்.

இறுதியாக இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 314 ரன்கள் குவித்தது. பங்களாதேஷ் அணி பந்து வீச்சில் முஸ்தாபிசுர் ரஹ்மான் 5 விக்கெட்டை பறித்தார். இந்நிலையில் 315 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் அணியின் தொடக்க வீரரான தமீம் இக்பால் ,சௌமியா சர்க்கார் இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே இருந்து இருவருமே தடுமாறி விளையாடி வந்தனர்.

அப்போது தமீம் இக்பால் 31 பந்திற்கு 22 ரன்களுடன் வெளியேறினர்.பின்னர் பங்களாதேஷ் அணியின் நட்சத்திர வீரர் ஷாகிப் அல் ஹசன் இறங்கினர். தடுமாறி விளையாடிய சௌமியா சர்க்கார் ஹார்திக் பாண்டிய வீசிய வேக பந்தில் அவுட் ஆனார்.

பின்னர் ஷாகிப் அல் ஹசன் அதிரடி ஆட்டத்தால் அணியின் ரன்கள் உயர்ந்தது.இப்போட்டியில் ஷாகிப் அல் ஹசன் 74 பந்தில் 66 ரன்கள் குவித்தார். அதில் 6 பவுண்டரி அடக்கும்.அடுத்தடுத்து களமிறங்கிய முஷ்பிகுர் ரஹீம் 24 , லிட்டன் தாஸ் 22 , மொசாடெக் ஹொசைன் 3 ரன்களுடன் வெளியேறினர்.

இறுதியாக பங்களாதேஷ் அணி 48 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது 286 ரன்கள் எடுத்து 28 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணி தோல்வியடைந்தது.இந்திய அணி பந்து வீச்சில் பும்ரா 4 விக்கெட்டையும் , ஹார்திக் பாண்டிய 3 விக்கெட்டையும் வீழ்த்தினார்.

Published by
murugan

Recent Posts

உதகை மலர் கண்காட்சி தொடக்கம்: மலர் சிம்மாசனத்தில் அமர்ந்த முதல்வர் ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…

11 minutes ago

காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்..குழந்தைகள் உள்பட 84 பேர் பலி!

காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…

39 minutes ago

இந்திய ராணுவம் தொடர் அதிரடி.., ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.!

புல்வாமா : ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவின் டிரால் பகுதியில் உள்ள நாடரில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக…

51 minutes ago

நெருங்கும் ஐபிஎல் பிளே ஆஃப்…பெங்களூர் முதல் மும்பை வரை மாற்றம் செய்யப்பட்ட வீரர்கள்?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கடந்த மே 10-ஆம் தேதி…

1 hour ago

14 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக பலூச் விடுதலை ராணுவம் அறிவிப்பு.!

பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் உள்நாட்டு பிரச்னைகள் தீவிரமடைந்துள்ளது. பலூசிஸ்தானுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் பலூச் தலைவர் மிர் யார்…

1 hour ago

அத்துமீறு என்பதை புரியாமல் சிலர் கலாய்க்கின்றனர்..அன்புமணிக்கு பதிலடி கொடுத்த திருமாவளவன்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…

2 hours ago