முக்கியச் செய்திகள்

Asia Cup Super Fours:இலங்கையை சொந்த மண்ணிலே வீழ்த்திய இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி !

Published by
Dinasuvadu Web

இந்தியா மற்றும் இலங்கைக்கு எதிரான ஆசிய கோப்பையின் சூப்பர் ஃபோர்ஸ், 4வது போட்டியானது கொழும்புவில் உள்ள  ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது.இப்போட்டியில் இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.இதனைத்தொடர்ந்து தொடக்க வீரர்களாக  ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இப்போட்டியில் ரோஹித் சர்மா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 10 ஆயிரம் ரன்களை கடந்தார்.இந்திய அணி 80 ரன் இருக்கும்போது சுப்மன் கில் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

கடந்த போட்டியில் சதம் அடித்து 13000 ரன்களை கடந்த விராட் கோலியின் மீது எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அவர் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்தார்.அடுத்ததாக கேப்டன் ரோஹித் சர்மா 53 ரன்களுக்கு ஆட்டமிழக்க  கே.எல். ராகுல் 39 ரன்கள் , இஷான் கிஷன் 33 ரன்கள், ஹர்திக் பாண்டியா 5 ரன்கள் , ரவீந்திர ஜடேஜா 4 ரன்கள் , அக்சர் படேல் 15 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தனர்.இறுதியில் இந்திய அணி 49.1 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்களை எடுத்தது.

இலங்கை பந்துவீச்சாளர்களில் துனித் வெல்லலகே 5 விக்கெட்களையும் அசலங்கா 4 விக்கெட்களையும்  வீழ்த்தி இந்திய அணியின் ஸ்கோரை வெகுவாக குறைத்து  நெருக்கடியை கொடுத்தனர்.எம் தீக்ஷனா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

214 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் பாத்தும் நிஸ்ஸங்க 6 ரன்களுக்கு பும்ராவிடம் ஆட்டமிழக்க மற்றொரு ஆட்டக்காரர் திமுத் கருணாரத்ன சிராஜிடம் ஆட்டமிழக்க இலங்கைக்கு ஆரம்பமே அடி சறுக்கியது.அதன் பின் வந்த அடுத்தடுத்து ஆட்டமிழக்க தனஞ்சய டி சில்வா(41) மற்றும்  துனித் வெல்லலகே (42) அணியை தோல்வியிலிருந்து மீட்க போராடினர்.இறுதியில் இலங்கை அணி 41.3 ஓவர 172 ரன்களுக்கு அனைத்து விக்கட்களையும் இழந்து தோல்வியை தழுவியது.இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய பந்துவீச்சாளர்களில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்களையும் , ஜஸ்பிரித் பும்ரா மற்றும்  ரவீந்திர ஜடேஜா தலா இரண்டு விக்கெட்களையும்.முகமது சிராஜ் மற்றும் ஹர்திக் பாண்டியா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.இப்போட்டியின் ஆட்டநாயகனாக இலங்கை அணியின் பந்துவீச்சாளர் துனித் வெல்லலகே தேர்வு செய்யப்பட்டார்.

Published by
Dinasuvadu Web

Recent Posts

”கேரளாவில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை” – வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

கேரளா : கேரளாவில் 8 நாட்கள் முன்கூட்டியே தென்மேற்கு பருவ மழைத் தொடங்கியதாக  இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD)…

15 minutes ago

மிரட்டும் கனமழை.!! 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.!

சென்னை : அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது .கோவை,…

1 hour ago

PBKS vs DC: ஆறுதல் வெற்றியுடன் தொடரை முடிக்குமா டெல்லி.? இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியுடன் மோதல்.!

ஜெய்ப்பூர்: ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றது. இந்த…

1 hour ago

நிதி ஆயோக் கூட்டம்: ஸ்டாலின் பங்கேற்பு.., மம்தா, சித்தராமையா பங்கேற்கவில்லை.!

டெல்லி : மத்திய அமைச்சரவை மூலம் கடந்த 2015, ஜனவரி 1-ல் உருவானது தான் நிதி ஆயோக். தேச வளர்ச்சி,…

2 hours ago

”கீழடி ஆய்வறிக்கையில் திருத்தம் தேவையில்லை” – தொல்லியல் ஆய்வாளர்.!

சென்னை : கீழடி, தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமாகும். இங்கு 2014-15 முதல் மத்திய தொல்லியல்…

3 hours ago

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.., எங்கெல்லாம் மழை வெளுத்து வாங்கும்?

சென்னை : அரபிக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம்…

3 hours ago