இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் 3 விதமான போட்டிகளிலும் அதிகமான ரன்கள் குவித்த வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.
இங்கிலாந்துக்கு சுற்று பயணம் மேற்கொண்ட இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 ஒரு நாள் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் மூன்று ஒரு நாள் போட்டி முடிவைடைந்துள்ளது. மூன்றுபோட்டியில் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை 2-1 என கைப்பற்றி ஒரு நாள் தொடரில் வெற்றி பெற்றது
ஒரு நாள் தொடரின் 3- வது போட்டி நேற்று வர்செஸ்டரில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 219 ரன்கள் எடுத்து. அடுத்ததாக களமிறங்கிய இந்திய அணி 46.3 ஓவர்களில் 220 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் ஆகிய அணைத்து போட்டிகளையும் சேர்த்து இங்கிலாந்து வீராங்கனை சார்லோட்டி எட்வர்ட்ஸ் 10,273 ரன்கள் எடுத்து உலக சாதனை வைத்திருந்தார்.
மேலும் தற்போது நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் மிதாலி ராஜு சார்லோட்டி எட்வர்ட்ஸ் சாதனையை முறியடித்தார். மிதாலி ராஜுக்கு இந்த சாதனையை முறியடிக்க 12 ரன்கள் மட்டுமே தேவைப்படிருந்த நிலையில், 24-வது ஓவரில் மிதாலி ராஜு பந்தை பவுண்டரி அடித்து எட்வார்ட்ஸ் சாதனையை முறியடித்தார். மொத்தமாக அவர் அடுத்த ரன்களின் எண்ணிக்கை 10,337.
அனைத்து விதமான போட்டிகளிலும் சேர்த்து 10ஆயிரம் ரன்களை எட்டிய முதல் இந்திய வீராங்கனை, உலகளவில் 2-வது வீராங்கனை என்ற சாதனையும் மிதாலி ராஜ் படைத்துள்ளார்.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…