INDvsWI:இந்திய அணி திணறல்..! ஏமாற்றிய புஜாரா, கோலி ..!

Published by
murugan

இந்திய அணி , வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்று பயணம் செய்து விளையாடி வருகிறது. இரண்டு அணிகளுக்கும் இடையே இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று ஆண்டிகுவாவில் தொடங்கியது. இந்த டெஸ்ட் போட்டி சாம்பியன்ஷிப் போட்டிக்கு உட்பட்டது .

Image

நேற்றைய போட்டியில் இந்திய அணியில் அஸ்வின் , ரோகித் சர்மாமற்றும் குல்தீப் ஆகியோர் இடம்பெறவில்லை.ஆனால் விஹாரி , ரவீந்திர ஜடேஜா அணியில் இடம் பிடித்தனர். போட்டி  மழை காரணமாக 15 நிமிடம் தாமதமாக தொடங்கப்பட்டது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கே.எல் ராகுல் ,மயங்க் அகர்வால் இருவரும்  களமிறங்கினர். வெஸ்ட் இண்டீசின் பந்து வீச்சில் இருவரும் தடுமாறினார். இதையடுத்து மயங்க் அகர்வால் 5 , புஜாரா 2 ரன்களிலும் வெளியேறினர். அடுத்து இறங்கிய  கேப்டன் விராட்கோலி 9 ரன் உடன்  வெளியேற இந்திய அணி 7.5 ஓவரில் 25 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து பரிதாப நிலையில் இருந்தது.

பின்னர் ராகுல் , ரஹானே இருவரும் அணியை சரிவில் இருந்து  மீட்டு வந்தனர். இந்திய அணி 93 ரன்கள் எடுத்திருந்தபோது கே. எல் ராகுல் 44 ரன்கள் எடுத்து வெளியேறினார். பின்னர்  ரஹானே நிதானமாக விளையாடி அரைசதம் விளாசி  81 ரன்கள் எடுத்தபோது கேப்ரியல் பந்தில் ரஹானே போல்டானார்.

நேற்றைய ஆட்ட முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழந்து 203 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் ரிஷாப் பண்ட்  20 , ஜடேஜா 3 ரன்களுடன் உள்ளனர்.இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்க உள்ளது.

Published by
murugan

Recent Posts

2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…

5 hours ago

அஜித்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…

6 hours ago

“ஒழுங்காக இருக்கணும். இல்லனா வேற மாதிரி ஆயிடும்” – விருதுநகர் எஸ்பி மிரட்டல் பேச்சால் சர்ச்சை.!

விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…

6 hours ago

”விசாரணை என துன்புறுத்தக் கூடாது” – காவல் துறை அதிகாரிகளுக்கு ஏடிஜிபி அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…

7 hours ago

தேர்வர்கள் கவனத்திற்கு: குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…

7 hours ago

அஜித்குமார் மீது புகார் கூறிய நிகிதா மீது பணமோசடி வழக்கு.! உடனே தலைமறைவு?

சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…

8 hours ago