INDvsWI:இந்திய அணி திணறல்..! ஏமாற்றிய புஜாரா, கோலி ..!

Published by
murugan

இந்திய அணி , வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்று பயணம் செய்து விளையாடி வருகிறது. இரண்டு அணிகளுக்கும் இடையே இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று ஆண்டிகுவாவில் தொடங்கியது. இந்த டெஸ்ட் போட்டி சாம்பியன்ஷிப் போட்டிக்கு உட்பட்டது .

Image

நேற்றைய போட்டியில் இந்திய அணியில் அஸ்வின் , ரோகித் சர்மாமற்றும் குல்தீப் ஆகியோர் இடம்பெறவில்லை.ஆனால் விஹாரி , ரவீந்திர ஜடேஜா அணியில் இடம் பிடித்தனர். போட்டி  மழை காரணமாக 15 நிமிடம் தாமதமாக தொடங்கப்பட்டது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கே.எல் ராகுல் ,மயங்க் அகர்வால் இருவரும்  களமிறங்கினர். வெஸ்ட் இண்டீசின் பந்து வீச்சில் இருவரும் தடுமாறினார். இதையடுத்து மயங்க் அகர்வால் 5 , புஜாரா 2 ரன்களிலும் வெளியேறினர். அடுத்து இறங்கிய  கேப்டன் விராட்கோலி 9 ரன் உடன்  வெளியேற இந்திய அணி 7.5 ஓவரில் 25 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து பரிதாப நிலையில் இருந்தது.

பின்னர் ராகுல் , ரஹானே இருவரும் அணியை சரிவில் இருந்து  மீட்டு வந்தனர். இந்திய அணி 93 ரன்கள் எடுத்திருந்தபோது கே. எல் ராகுல் 44 ரன்கள் எடுத்து வெளியேறினார். பின்னர்  ரஹானே நிதானமாக விளையாடி அரைசதம் விளாசி  81 ரன்கள் எடுத்தபோது கேப்ரியல் பந்தில் ரஹானே போல்டானார்.

நேற்றைய ஆட்ட முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழந்து 203 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் ரிஷாப் பண்ட்  20 , ஜடேஜா 3 ரன்களுடன் உள்ளனர்.இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்க உள்ளது.

Published by
murugan

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

12 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

12 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

13 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

14 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

14 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

14 hours ago