#IPL 2021: பெங்களூருக்கு எதிரான போட்டியில் 164 ரன்கள் எடுத்த டெல்லி!

Published by
பாலா கலியமூர்த்தி

ஐபிஎல் தொடரின் இறுதி லீக் ஆட்டத்தில் பெங்களூருக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 5 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்துள்ளது.

இன்றைய ஐபிஎல் தொடரின் 56-வது லீக் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், டெல்லி கேபிடல்ஸ் ஆகிய இரு அணிகள் விளையாடி வருகிறது. அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் ஸ்டேடித்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரர்களான பிரித்வி ஷா 48 ரன்களும், ஷிகர் தவான் 43 ரன்களும் அடித்து வெளியேறினர். இவர்களை தொடர்ந்து வந்த வீரர்கள் ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் ஒரு சில ரன்களை மட்டுமே அடித்து விக்கெட்டை இழந்தனர்.

இதன்பின் ஹெட்மியர் 29 ரன்கள் எடுத்து அவுட்டானார். இறுதியாக டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்களை எடுத்துள்ளது. பெங்களூர் பந்துவீச்சை பொறுத்தளவில் முகமது சிராஜ் 2, யுஸ்வேந்திர சாஹல், ஹர்ஷல் படேல், டேனியல் கிறிஸ்டியன் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். இந்த நிலையில் 165 ரன்கள் அடித்தால் பெங்களூர் அணி வெற்றி பெறும்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

கேப்டன் விஜயகாந்த் வேற விஜய் வேற – விஜய பிரபாகரன் பேச்சு!

கேப்டன் விஜயகாந்த் வேற விஜய் வேற – விஜய பிரபாகரன் பேச்சு!

சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) தலைவர் விஜய பிரபாகரன், 2025 ஜூன் 29 அன்று சென்னை…

11 minutes ago

“அவுங்க வருத்தப்படணும்”..டிரம்ப், நெதன்யாகுவுக்கு பத்வா எச்சரிக்கை கொடுத்த ஈரான் மதகுரு!

தெஹ்ரான்: ஈரானின் மூத்த மதகுரு கிராண்ட் ஆயத்துல்லா நாசர் மகாரெம் ஷிராஸி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல்…

56 minutes ago

சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகள் – சேவையை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி…

2 hours ago

அன்புமணி சொல்வது ஏற்புடையதல்ல..ராமதாஸ் குறித்த விமர்சனத்திற்கு அருள் பதிலடி!

சேலம் :பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து…

2 hours ago

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…

14 hours ago

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

14 hours ago