Phil Salt [Image source : Twitter/@IPL]
ஐபிஎல் தொடரின் இன்றைய DC vs RCB போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
16-வது ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறும் நிலையில், இரவு 7:30 மணிக்கு நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் விளையாடின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி, பெங்களூரு அணியில் முதலில் விராட் கோலி மற்றும் டு பிளெசிஸ் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். விராட் கோலி மற்றும் மஹிபால் அதிரடியாக விளையாடி பவுண்டரிகள், சிக்ஸர்கள் என அடித்து அரைசதம் விளாசினார். முடிவில், பெங்களூரு அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் அடித்தது.
இதனையடுத்து, 182 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கில் டெல்லி அணியில் முதலில் டேவிட் வார்னர் மற்றும் பிலிப் சால்ட் களமிறங்கி நல்லத் தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர். டேவிட் வார்னர் 22 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பிலிப் சால்ட் அதிரடியாக விளையாடி 28 பந்துகளில் 53 ரன்கள் அடித்தார். அவரையடுத்து, மிட்செல் மார்ஷ் களமிறங்கி 26 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார்.
மேலும், சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பிலிப் சால்ட் அதிகபட்சமாக 87 ரன்கள் வரை அடித்து ஆட்டமிழந்தார். முடிவில், டெல்லி அணி 16.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் குவித்துள்ளது. டெல்லி அணியில் அதிகபட்சமாக, பிலிப் சால்ட் 87 ரன்களும், ரிலீ ரோசோவ் 29 ரன்களும், மிட்செல் மார்ஷ் 26 ரன்களும், டேவிட் வார்னர் 22 ரன்களும் குவித்துள்ளனர். இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் புள்ளிப்பட்டியலில் இதுவரை 10-வது இடத்தில் இருந்த டெல்லி அணி, 9-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…