2020-ம் ஆண்டு 13வது ஐபிஎல் தொடர் வரும் மார்ச் மாதம் 29ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் 8 அணிகள் பங்கேற்றுள்ளனர். அதில் ஒன்றான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு கேப்டனாக ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை சன்ரைசர்ஸ் அணி ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இதனிடையே கடந்த 2018ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் கேப்டனாக இருந்த டேவிட் வார்னர், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கி ஓராண்டு தடை பெற்றார். இதனால், சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டு, நியூஸிலாந்து வீரர் வில்லியம்சனிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் தடைக்காலம் முடிந்து கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடிய வார்னர், வில்லியம்சன் தலைமையின் கீழ் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…