“அறுவை சிகிச்சை முடிந்தது.. விரைவில் களத்திற்கு திரும்புவேன்”- ஜடேஜா ட்வீட்!

Published by
Surya

ஜடேஜாக்கு கையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் கையில் கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். 

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள், டி-20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, நேற்று நடந்த 3 ஆம் போட்டியை இந்திய அணி டிரா செய்ததால், நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமனில் உள்ளது. இதனைதொடர்ந்து 4 ஆம் டெஸ்ட் போட்டி, இம்மாதம் 15 முதல் 19 ஆம் தேதி வரை பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

சிட்னியில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியின் போது இந்திய வீரர்கள் பலருக்கும் காயம் ஏற்பட்டது. இதனால் ஜடேஜா, பும்ரா, விஹாரி ஆகிய இந்திய வீரர்கள், 4 ஆம் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளனர். அந்தவகையில் ஜடேஜாக்கு 3 ஆம் நாளில் கம்மின்ஸ் வீசிய பவுன்சர் பந்து, ஜடேஜாவின் இடது கையில் பட்டு, காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து சிட்னியில் உள்ள மருத்துவமனையில் ஜடேஜா சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் கையில் கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, அறுவை சிகிச்சை முடிந்து விட்டதால் சில நாட்களுக்கு தன்னால் ஆட முடியாது எனவும், விரைவில் களத்திற்கு திரும்பவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Published by
Surya

Recent Posts

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

6 hours ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

7 hours ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

8 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

8 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

10 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

11 hours ago