ஜெய்ப்பூர் எனக்கு மிகவும் நெருக்கமான இடம்.. தோல்வி குறித்து சி.எஸ்.கே. கேப்டன் தோனி விளக்கம்!

Published by
பாலா கலியமூர்த்தி

பேட்டிங்கிலும் நல்ல தொடக்கம் இல்லை என ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோல்வி குறித்து தோனி விளக்கம்.

ஐபிஎல் தொடரின் நேற்றைய 37 லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜாஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. ஜெய்ப்பூரில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 202 என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது.

ராஜஸ்தான் வெற்றி:

பின்னர் களமிறங்கிய சென்னை அணி வீரர்கள் ராஜஸ்தான் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தொடக்கத்தில் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் 20 ஓவருக்கு 6 விக்கெட் இழந்து 170 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், ராஜஸ்தான் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வேற்று பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் சென்றது.

தோனி விளக்கம்:

இப்போட்டிக்கு பிறகு பேசிய சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோல்வி குறித்து விளக்கமளித்தார். அவர் கூறுகையில், முதல் 6 ஓவர்களில் அதிக ரன்களை கொடுத்து விட்டோம். ஆடுகளமும் ராஜஸ்தான் பேட்டிங்கிற்கு சாதகமாக அமைந்ததால், அவர்களுக்கு நிறைய ரன்கள் கிடைத்தது.

நல்ல தொடக்கம் இல்லை:

பவுலர்கள் மிடில் ஓவர்களில் நன்றாக பந்து வீசினார்கள், அதிக ரன்கள் இலக்கு என்பதால் பவர் பிளேயில் நன்றாக விளையாடி இருக்க வேண்டும். ஆனால் சென்னை பேட்டிங்கிலும் நல்ல தொடக்கம் அமையவில்லை என விளக்கமளித்தார். இதன்பின் பேசிய தோனிம், இந்த சீசன் முழுவதும் ரசிகர்கள் (மஞ்சள் படை) என்னை பின் தொடர்ந்து வருவார்கள் என நினைக்கிறேன்.

தோனி நெகிழ்ச்சி:

ஜெய்ப்பூர் எனது மனதுக்கு மிகவும் நெருக்கமான இடம், என் முதல் ஒருநாள் சதம் வைசாக் மைதானத்தில் நிகழ்ந்தது. அது எனக்கு மேலும் 10 ஆட்டங்கள் ஏற்படுத்தி கொடுத்தது, ஆனால் நான் ஜெய்ப்பூரில் அடித்த 183 ரன்கள் எனக்கு மேலும் ஒரு வருட வாய்ப்பு கிடைக்க வழிவகை செய்தது என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

6 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

6 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

6 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

8 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

8 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

10 hours ago