IndvsEng: சச்சின் சாதனையை முறியடித்த ஜோ ரூட்!!

Published by
பால முருகன்

இந்தியா-இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரில் சச்சின் டெண்டுல்கரை பின்னுக்குத் தள்ளி ரூட் சாதனை ஒன்றை படைத்து அசத்தியுள்ளார். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அப்போது முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து கிரிக்கெட் ஜோ ரூட் 60 பந்துகளில் ஒரு பவுண்டரி அடித்து 29 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், ஜோ ரூட் தற்போது இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் 2,555 ரன்கள் எடுத்துள்ளார்.

IndvsEng: இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 246 ரன்களுக்கு ஆல் அவுட்!

இதனையடுத்து, இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிகளில் அதிகம் ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை ஜோ ரூட் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் இங்கிலாந்து அணிக்கு எதிராக 32 போட்டிகளில் விளையாடி 2,535 ரன்கள் எடுத்து இருந்தார்.

அதனை தொடர்ந்து ஜோ ரூட் இந்தியாவுக்கு எதிராக 48 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2,555 ரன்கள் அடித்தார். இதுவரை ஜோ ரூட் இந்தியாவுக்கு எதிராக டெஸ்டில் 9 சதங்கள் மற்றும் 10 அரை சதங்கள் அடித்துள்ளார். மேலும், இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Published by
பால முருகன்

Recent Posts

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

1 hour ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

1 hour ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

2 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

2 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

5 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

6 hours ago