ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பதவியில் இருந்து வார்னர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய கேப்டனாக கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பல அதிரடி வீரர்களை கொண்டுள்ள ஹைதராபாத் அணி, ஒரே ஒரு போட்டியில் மட்டும் வெற்றிபெற்றுள்ளது. குறிப்பாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வார்னரின் ஆமைவேக விளையாட்டே தோல்விக்கு காரணம் என்றும், அவருக்கு பதில் கேன் வில்லியம்சனுக்கு கேப்டன் பொறுப்பை கொடுக்கலாம் என்று முன்னாள் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் கேப்டன் பொறுப்பில் இருந்து வார்னர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய கேப்டனாக நியூஸிலாந்து அணியில் அதிரடி கேப்டனான கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளார். வில்லியம்சன், நாளை ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டி முதல் கேப்டனாக பதவியேற்கவுள்ளார். இதனை ஹைதராபாத் அணி, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…