இந்திய அணியில் கேப்டனான “கிங் கோலி”, நேற்று தனது 32 ஆம் பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அந்த வகையில், நேற்று அவரது பிறந்த நாளை அவரது மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் அவரது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி உட்பட மற்றவர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார். இதனை, துபாயில் விராட்டின் பிறந்தநாளை கொண்டாடிய வீடியோக்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலானது.
அந்த வீடியோவில், ஒரு கிளிப்பில் விராட் தனது பிறந்தநாள் கேக்கை வெட்டுவதைப் பார்க்கலாம் மேலும் அவரைச் சுற்றியுள்ள அனைவரும் ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என்று பாடி கைதட்டினர். அவரது பக்கத்தில் நிற்கும் அனுஷ்கா, அவருக்கு முதல் கேக்கை ஊட்டினார், அதன் பிறகு அவர் அவளுக்கு ஒரு துண்டு கொடுக்கிறார். பின்னர் விராட் தனது மனைவிக்கு நெற்றியில் முத்தமிட்டார்.
அதன் பின்னர், விராட்டின் முகத்தில் கேக் பூசப்பட்டிருக்கும் படங்கள் மற்றும் வீடியோக்களும் இணையதளத்தில் வைரலாகியது. நடந்துகொண்டிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக்கில் தனது அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பிளேஆஃப்களில் இடம் பிடித்திருப்பதால், கிரிக்கெட் வீரர் பிறந்தநாள் இரட்டை சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளது. அதில், இவரது பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடிவிட்டு, அதன் பின்னர் கப்பலில் ஒரு நைட் பார்ட்டி போல் அமைக்கப்பட்டுள்ளது. அதில், அனைவரும் டான்ஸ் ஆடினார்கள், அந்த வகையில் தனது பிறந்தநாளை விராட் கோலியும் உற்சாகமாக டான்ஸ் ஆடி கொண்டாடினார் இதோ, அந்த வீடியோ……
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…