16வது ஓவரிலேயே மும்பை அணியை எளிதில் வீழ்த்தி பாய்ண்ட்ஸ் டேபிளில் கொல்கத்தா முதலிடம் பிடித்துவிட்டது.
ஐபிஎல் போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணி மும்பை அணியை எதிர்கொண்டது. இதில் தொடர் தோல்வியில் இருந்த தப்பிக்க மும்பை அணியும், முதலிடத்திற்கு செல்ல கொல்கத்தாவுக்கு ஆயத்தமாகின.
முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 161 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 52 ரன்கள் விளாசினார். திலக் வர்மா 38 ரன்களும், பிரேவிஸ் 29 ரன்களும், போலார்டு 22 ரன்களும் அடித்து இருந்தனர்.
20 ஓவரில் 162 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியிலோ தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் மட்டும் 50 ரன்களுடன் கடைசி வரை நிலைத்து நிற்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக வெங்கடேஷ் உடன் கைகோர்த்த பேட் கம்மின்ஸ் 15 பந்துகளில் 56 ரன்கள் அடித்து அணியை 16 ஓவர் முடிவில் எளிதில் வெற்றிபெற வைத்து விட்டார்.
இதன் காரணமாக கொல்கத்தா அணி 4 போட்டிகளில் 3இல் வெற்றி கண்டு டேபிள் டாப்பிற்கு சென்றுள்ளது. மும்பை அணி முதல் 3 போட்டிகளில் தோல்வியடைந்து கடைசிக்கு முந்தைய இடத்தில் இருக்கிறது.
ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…