#KKR v SRH: மீண்டும் தடுமாற்றம்… ஹைதராபாத்தை 115 ரன்களில் சுருட்டிய கொல்கத்தா!

Published by
பாலா கலியமூர்த்தி

ஐபிஎல் தொடரின் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட் இழப்புக்கு ஹைதராபாத் அணி 115 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் இன்றைய தினத்தின் இரண்டாவது ஆட்டமான 49வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய இரு அணிகள் விளையாடி வருகிறது. துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களான ஜேசன் ராய் 10 ரன்களிலும், விருத்திமான் சாஹா ரன் எதும் அடிக்காமல் இருவரும் விக்கெட்டை இழந்தனர். இதன்பின் கேப்டன் கேன் வில்லியம்சன், ப்ரியம் கார்க் ஆகியோர் நிதானமாக விளையாடி வந்த நிலையில், வில்லியம்சன் 26 ரன்களில் ரன் அவுட்டாக, கார்க் 21 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இவர்களை தொடர்ந்து அப்துல் சமத் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பின்னர் வந்த வீர்ரகள் கொல்கத்தா பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறி தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியாக ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் மட்டுமே எடுத்தது.

கொல்கத்தாவில் சிறப்பாக பந்துவீசிய டிம் சவுத்தி, சிவம் மாவி, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். சிறப்பான பந்துவீச்சு காரணமாக ஹைதராபாத்தை 115 ரன்களில் கொல்கத்தா சுருட்டியதால், 116 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“ரொம்ப கவனமா விளையாடுங்க”..இந்தியாவுக்கு எச்சரிக்கை கொடுத்த கங்குலி!

“ரொம்ப கவனமா விளையாடுங்க”..இந்தியாவுக்கு எச்சரிக்கை கொடுத்த கங்குலி!

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…

6 hours ago

ஆய்வில் அதிர்ச்சி : “குழந்தைகளுக்கு செல்போன் கொடுக்காதீங்க” எய்ம்ஸ் மருத்துவமனை எச்சரிக்கை!

டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…

7 hours ago

பி.எட். மாணவர் சேர்க்கை: விண்ணப்ப அவகாசம் ஜூலை 21 வரை நீட்டிப்பு!

சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…

10 hours ago

INDvsENG : இனிமே தான் போட்டி செமயா இருக்கும்… 4 ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கும் ஜோப்ரா ஆர்ச்சர்!

லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…

10 hours ago

தூத்துக்குடி வின்ஃபாஸ்ட் தொழிற்சாலை: ‘நான் முதல்வன்’ திட்டத்தில் 200 மாணவர்கள் தேர்வு!

சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…

11 hours ago

புடின் மக்களை கொல்கிறார்…கடுமையாக சாடிய டொனால்ட் டிரம்ப்!

வாஷிங்டன் :  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…

11 hours ago