ராஜஸ்தான் அணி 16.1 ஓவர் முடிவில் 85 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்து 86 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 54வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளும் மோதியது. ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய கொல்கத்தா தொடக்க வீரர்களான சுப்மான் கில் 56 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 38 ரன்களும் அடித்து விக்கெட்டை இழந்தனர். இறுதியாக 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை கொல்கத்தா அணி எடுத்து. 172 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், லியாம் லிவிங்ஸ்டோன் இருவரும் களமிறங்கினர். வந்த வேகத்தில் ஜெய்ஸ்வால் டக் அவுட் ஆனார்.
பின்னர் இறங்கிய சஞ்சு சாம்சன் 1 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்த சில நிமிடங்களில் லியாம் லிவிங்ஸ்டோன் 6 ரன் எடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த சிவம் துபே 18 ரன் எடுத்து விக்கெட்டை இழக்க பின் ராஜஸ்தான் அணியில் களம் கண்ட அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்கு ரன்களுடன் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.
ராஜஸ்தான் அணியில் மத்தியில் இறங்கிய ராகுல் திவாட்டியா மட்டும் நிதானமான ஆட்டத்தால் 44 ரன் எடுக்க இறுதியாக ராஜஸ்தான் அணி 16.1 ஓவர் முடிவில் 85 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்து 86 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
கொல்கத்தா அணியில் சிவம் மாவி 4, லோக்கி பெர்குசன்3 , வருண் சக்கரவர்த்தி, ஷாகிப் அல் ஹசன் தலா 1 விக்கெட்டை பறித்தனர். கொல்கத்தா வெற்றி பெற்றதன் மூலம் புள்ளி பட்டியலில் 14 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…
சென்னை : சென்னை பெரம்பூரில் இருசக்கர வாகனத்தில் தாயுடன் பள்ளிக்கு சென்ற போது தண்ணீர் லாரி மோதி சௌமியா என்கிற…
மதுரை : நித்யானந்தா, ஒரு சர்ச்சைக்குரிய ஆன்மிகவாதியாகவும், இந்தியாவில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தேடப்படும் நபராகவும் உள்ளார். இவர் மீது…