கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 133 ரன்கள் எடுத்தனர்.
இன்று ஐபிஎல் தொடரின் 18 வது லீக் போட்டியில் கொல்கத்தா அணியும் – ராஜஸ்தான் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது.
கொல்கத்தா அணியில் தொடக்க வீரர்களாக நிதீஷ் ராணா, சுப்மான் கில் இருவரும் இறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே இருந்து நிதானமாக விளையாடிய சுப்மான் கில் 11 ரன்னில் ரன் அவுட் ஆனார். பின்னர், ராகுல் திரிபாதி இறங்கினார். அடுத்த சில நிமிடங்களில் நிதீஷ் ராணா 22 ரன் எடுத்து வெளியேறினார்.அடுத்து இறங்கிய சுனில் நரைன் 6, மோர்கன் டக் அவுட் ஆனார்.
இதனால், கொல்கத்தா அணி 61 ரன்னில் 4 விக்கெட்டை இழந்தனர். சிறப்பாக விளையாடி வந்த ராகுல் திரிபாதி 36 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். பின்னர், இறங்கிய அனைத்து வீரர்களும் நிலைத்து நிற்கவில்லை மத்தியில் களம் கண்ட தினேஷ் கார்த்திக் மட்டும் 25 ரன்கள் எடுத்தார்.
இறுதியாக கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 133 ரன்கள் எடுத்தனர். 134 ரன்கள் இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கவுள்ளது.
லக்னோ : ஐபிஎல் 2025 இன் 61வது போட்டி இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு…
டெல்லி : கொரோனா தொற்று மீண்டும் உலகம் முழுவதும், குறிப்பாக, தென்கிழக்காசியாவில் வேகமாக பரவுகிறது. கொரோனா வைரஸின் ஒமைக்ரான் வேரியன்ட்களில்…
லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ…
சென்னை : யோகி டா பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், விஷால் - சாய் தன்ஷிகா…
சென்னை : நடிகர் விஷால் நடிகை சாய் தன்ஷிகாவை ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. விஷாலும்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு திங்களன்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் இராணுவ மோதல் குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி…