ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள 20-வது போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜியன்ட்ஸ் அணிகள் மோதவுள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – லக்னோ சூப்பர் ஜியன்ட்ஸ் அணிகள் மோதவுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு இந்த போட்டி தொடங்கவுள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 2 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 4-ம் இடத்தில் உள்ளது. அதேபோல கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜியன்ட்ஸ் அணி, 4 போட்டிகளில் விளையாடி, 3 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 3-ம் இடத்தில் உள்ளது. ஐபிஎல் தொடரின் புதிய அணியான லக்னோ, இம்முறை கோப்பையை வெல்லும் நோக்குடன் தீவிரமாக ஆடிவருகிறது.
எதிர்பார்க்கப்படும் XI:
ராஜஸ்தான் ராயல்ஸ்:
ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால் (அல்லது) தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), ஷிம்ரன் ஹெட்மேயர், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜிம்மி நீஷம், நவ்தீப் சைனி, டிரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல்.
லக்னோ சூப்பர் ஜியன்ட்ஸ்:
கே.எல். ராகுல் (கேப்டன்), குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), எவன் லூயிஸ், தீபக் ஹூடா, ஆயுஷ் படோனி, க்ருனால் பாண்டியா, ஜேசன் ஹோல்டர், கிருஷ்ணப்பா கவுதம், ஆண்ட்ரூ டை, ரவி பிஷ்னோய், அவேஷ் கான்.
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…
சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…
டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…
இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…
சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…
இஸ்ரேல் : ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர்…