மயங்க் அகர்வால் முதல் டெஸ்டில் இருந்து விலகல் – பிசிசிஐ அறிவிப்பு ..!

Published by
murugan

மயங்க் அகர்வால் காயம் காரணமாக முதல் டெஸ்டில் இருந்து விலகினார்.

இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் நாளை மறுநாள் நாட்டிங்ஹாமில் தொடங்குகிறது. இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் மயங்க் அகர்வால் காயம்  காரணமாக விலகியுள்ளார். மயங்க் அகர்வால் இன்று வலைகளில் பயிற்சியில் பேட்டிங் செய்யும் போதுகாயம் ஏற்பட்டது.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் இன்று நாட்டிங்ஹாமில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜில் வலை பயிற்சியில் பேட்டிங் செய்யும் போது  சக வீரர் முகமது சிராஜின் வீசி பந்து மயங்க் அகர்வால் ஹெல்மெட் மீது அடித்ததில் காயம் ஏற்பட்டது. இதனால், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இருந்து மயங்க் அகர்வால் விலக்கப்பட்டார் என தெரிவிக்கப்பட்டது.

இரண்டு நாட்களில் தொடங்கும் முதல்டெஸ்டில் மயங்க் அகர்வாலுக்கு பதிலாக  கே.எல்.ராகுல் தொடக்க பேட்ஸ்மேனாக களமிறங்க வாய்ப்புள்ளது.

Published by
murugan

Recent Posts

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

1 hour ago

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

2 hours ago

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

2 hours ago

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

3 hours ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

4 hours ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

5 hours ago