#IPL2022: பவர்கட்-ஆல் திரும்பிய போட்டி.. மும்பை அணிக்கு 98 ரன்கள் இலக்கு!

Published by
Surya

ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெற்று வரும் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி, அனைத்து விக்கெட்களையும் இழந்து 97 ரன்கள் எடுத்தது. 98 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியுள்ளது.

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்பொழுது நடைபெற்று வரும் 59-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி வருகிறது. வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, அதன்படி சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் – கான்வே களமிறங்கினார்கள்.

இந்த ஆட்டம் தொடங்கும் முன்னதாக மைதானத்தில் மின்வெட்டு ஏற்பட்டுள்ள காரணமாக DRS முறை பார்க்க முடியாது என்று அம்பயர்கள் அறிவித்தனர். அந்தவகையில் டெவன் கான்வே, 2-ம் பந்தில் LBW முறையில் ஆட்டமிழந்தார். அந்த பந்து, லெக் சைடில் மிஸ் ஆவதாக கூறப்படுகிறது. DRS இல்லை என்று அம்பயர்கள் கூறியதால் வேறு வழி இல்லாமல் கான்வே வெளியேறினார்.

அவரைதொடர்ந்து களமிறங்கிய மொயின் அலி டக் அவுட் ஆக, பின்னர் ராபின் உத்தப்பாவும் LBW முறையில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் ருதுராஜ் 7 ரன்கள் எடுத்தும், அம்பதி ராயுடு 10 ரன்கள் அடித்து தங்களின் விக்கெட்டை இழக்க, பவர் பிளே ஓவர் முடிவில் சென்னை அணி 5 விக்கெட்களை இழந்தது. பின்னர் களமிறங்கிய துபே 10 ரன்கள் எடுத்தும், பிராவோ 12 ரன்கள் எடுத்தும், சமர்ஜித் சிங் 2 ரன்கள் எடுத்து வெளியேற, மறுமுனையில் ஆடிவந்த தோனி கடைசிவரை களத்தில் இருந்தார். இறுதியாக 16 ஓவர்கள் முடிவில் சென்னை அணி, அனைத்து விக்கெட்களையும் இழந்து 97 ரன்கள் எடுத்தது. 98 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது மும்பை அணி களமிறங்கியுள்ளது.

Published by
Surya

Recent Posts

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…

5 hours ago

“கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…

5 hours ago

”ராமதாஸ் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது” – அன்புமணி தலைமையில் தீர்மானம்.!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…

6 hours ago

பண மோசடி வழக்கு: பிரபல மலையாள நடிகர் செளபின் சாஹிர் கைது.!

கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…

6 hours ago

3வது டெஸ்ட் போட்டி: தீவிர பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணி..!

லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…

7 hours ago

ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்குப் பதிவு.!

உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…

8 hours ago