MLC Final23 [Image-MLC]
அறிமுக மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் பைனலில் சியாட்டில் ஆர்கஸ் மற்றும் எம்ஐ நியூயார்க் அணிகள் பலப்பரிட்சை.
அமெரிக்காவின் மாபெரும் கிரிக்கெட் தொடராக நடப்பு ஆண்டில் ஐபிஎல் தொடர் போன்று மேஜர் லீக் கிரிக்கெட் எனும் தொடர் அறிமுகப்படுத்தப்பட்டது. 6 அணிகளுடன் தொடங்கிய எம்.எல்.சி தொடரில் இறுதிப்போட்டி இன்று கிராண்ட் ப்ரைர் ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. சியாட்டில் ஆர்கஸ் அணி தொடரில் வலிமை வாய்ந்த அணியாகவும், முதல் அணியாக இறுதிப்போட்டியில் நுழைந்தது.
முதல் குவாலிபயர் போட்டியில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியுடன் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இதேபோல் மற்றொரு அணியாக எம்ஐ நியூயார்க் அணி புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு தகுதி பெற்று எலிமினேட்டர் சுற்றில் வாஷிங்டன் ஃபிரீடம் அணியுடன் வெற்றி, மற்றும் இரண்டாவது குவாலிபயர் (சேலஞ்சர்ஸ்) போட்டியில் டெக்சாஸ் அணியுடன் வெற்றி பெற்று இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்த அறிமுக மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் பைனலில் வென்று முதன்முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் இரு அணிகளுக்கும் கடுமையான போட்டி நிலவும் என்பதில் சந்தேகமில்லை. போட்டி இந்திய நேரப்படி காலை 6 மணிக்கு தொடங்குகிறது.
சியாட்டில் ஆர்கஸ் அணி:
குயின்டன் டி காக்(w), நௌமன் அன்வர், ஷெஹான் ஜெயசூர்யா, ஹென்ரிச் கிளாசன், ஷுபம் ரஞ்சனே, டுவைன் பிரிட்டோரியஸ், இமாத் வாசிம், வெய்ன் பார்னெல்(c), ஹர்மீத் சிங், ஆண்ட்ரூ டை, கேமரூன் கேனன், ஏஞ்சலோ பெரேரா, ஹேடன் வால்ஷ், நிஸ் ஜோன்ஸ், படேல், பானி சிம்ஹாத்ரி, மேத்யூ ட்ராம்ப்
மும்பை நியூயார்க் அணி:
ஷயான் ஜஹாங்கீர், டெவால்ட் ப்ரீவிஸ், ஸ்லேட் வான் ஸ்டேடன், டிம் டேவிட், நிக்கோலஸ் பூரன்(w/c), டேவிட் வைஸ், ஸ்டீவன் டெய்லர், ரஷித் கான், நோஸ்துஷ் கென்ஜிகே, டிரென்ட் போல்ட், எஹ்சான் அடில், கீரன் பொல்லார்ட், ஹம்மாட் ஆசம், சரப்ஜித் லடா, ஜேசன் பெஹ்ரெண்டா , ககிசோ ரபாடா, வக்கார் சலாம்கெயில், மோனாங்க் படேல், ஜஸ்தீப் சிங், டிரிஸ்டன் ஸ்டப்ஸ்
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…