தந்தையின் கல்லறைக்கு சென்று இறுதி அஞ்சலி செலுத்திய முகமது சிராஜ்.!

Published by
பாலா கலியமூர்த்தி

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு விட்டு தாய் நாடு திரும்பிய முகமது சிராஜ், தந்தையின் கல்லறைக்கு சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார்.

முகமது சிராஜ் ஐபிஎல் போட்டியை முடித்ததும், ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அவர் அந்நாட்டு விதிமுறைப்படி தனிமையில் இருந்தார். அப்போது, சிராஜின் தந்தை நுரையீரல் பாதிப்பு காரணமாக கடந்த வருடம் நவம்பர் மாதம் காலமானார். ஆஸ்திரேலியாவில் இருந்த சிராஜ், தந்தையின் இறுதி சடங்கில் கூட பங்கேற்க முடியவில்லை.

கிரிக்கெட் விளையாடினால் தான் அப்பாவுக்கு பிடிக்கும். இந்த தொடரில் நான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவை வெற்றி பெற செய்து, அந்த வெற்றியை அப்பாவுக்கு அஞ்சலியாக செலுத்துவேன் என தெரிவித்திருந்தார். அதன்படி, தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதி ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது.

இந்நிலையில், ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு விட்டு தாய் நாடு திரும்பிய முகமது சிராஜ், தந்தையின் கல்லறைக்கு சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார். தற்போது சிராஜ் தனது தந்தைக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

உலகளவில் 20-ல் ஒருவரை பாதிக்கும் நோய்…ட்ரம்பிற்கு ஏற்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தகவல்!

உலகளவில் 20-ல் ஒருவரை பாதிக்கும் நோய்…ட்ரம்பிற்கு ஏற்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தகவல்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது கால்களில் ஏற்பட்ட வீக்கத்தை அடுத்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இதில்,…

16 minutes ago

தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை..? எடப்பாடி பழனிசாமி சொன்ன பதில்!

சென்னை: அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி, தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய்யுடன்…

57 minutes ago

உடல் தகுதி இல்லை என்றால் விளையாடவே வேண்டாம்..பும்ரா குறித்து கடுப்பான திலீப் வெங்சர்க்கர்!

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில்…

3 hours ago

காசாவில் தினமும் 28 குழந்தைகள் கொலை…யுனிசெஃப் கவலை!

காசா :  கடந்த இரண்டு ஆண்டுகளாக தினமும் சராசரியாக 28 குழந்தைகள் காசாவில் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள்…

4 hours ago

உடல் நலக்குறைவால் இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார்!

சென்னை : தமிழ் திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளரும், நடிகருமான வேலு பிரபாகரன் (வயது 68), உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள…

4 hours ago

நெல்லை : 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை.. 2 பேருந்துகளுக்கு தீ வைப்பு!

நெல்லை : மாவட்டம் வீரவநல்லூரில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது…

5 hours ago