#IPL2022: முகேஷ் சவுத்திரி அதிரடி பந்துவீச்சு.. முதல் ஓவரிலே ரோஹித், இஷான் கிஷன் அவுட்!

Default Image

ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெற்று வரும் போட்டியில் சென்னை – மும்பை அணிகள் மோதிவரும் நிலையில், தற்பொழுது பவர் பிளே ஓவர் முடிவில் மும்பை அணி, 3 விக்கெட்கள் இழப்பிற்கு 42 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 33-வது போட்டியில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி மோதி வருகிறது. DY பட்டில் மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா – இஷான் கிஷன் களமிறங்கினார்கள்.

இதில் 2-ம் பந்திலே ஒரு ரன் கூட எடுக்காமல் ரோஹித் ஷர்மா தனது விக்கெட்டை இழக்க, தேவால்டு களமிறங்கினார்கள். அவர் ஓங்கி அடித்த பந்தை நோக்கி ஜடேஜா செல்ல, அவரால் அந்த பந்தை பிடிக்க முடியவில்லை. ஆனால் அடுத்த பந்திலே அவர் அதிரடி வீரர் இஷான் கிஷன் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.

அதனைதொடர்ந்து 2-ம் ஓவரில் சூரியகுமார் யாதவ் அதிரடியாக ஆட, 3-ம் ஓவரை மீண்டும் முகேஷ் சவுத்திரி வீசினார். அந்த ஓவரில் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக ஆட, மறுமுனையில் இருந்த தேவால்டின் விக்கெட்டை மீண்டும் முகேஷ் சவுத்திரி வீழ்த்தினார். தற்பொழுது பவர் பிளே ஓவர்கள் முடிவடைந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி, 3 விக்கெட்கள் இழப்பிற்கு 42 ரன்கள் எடுத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts